கிராமப்புற வங்கிகளின் புதிய பங்கு வெளியீடு கிராமப்புற வங்கிகளின் புதிய பங்கு வெளியீடு ... மூடப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் 44 சதவீதமாக அதிகரிப்பு மூடப்பட்ட நிறுவனங்கள் தமிழகத்தில் 44 சதவீதமாக அதிகரிப்பு ...
போலி வரி ஆலோசகர்கள்: ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2019
05:11

ஜி.எஸ்.டி., வரி செலுத்துதல் மற்றும் கணக்கு தாக்கல் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட நிறுவனமே தாக்கல் செய்ய வேண்டும் எனவும்; போலி வரி ஆலோசகர்களிடம், பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்றவர்கள், ஜி.எஸ்.டி., வரி செலுத்துதல், கணக்கு தாக்கல் போன்றவற்றை, தாங்களே செய்வதில்லை. இதற்காக, வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்கு தணிக்கையாளர்களை நாடிச் செல்கின்றனர். ஆனால், சில வரி ஆலோசகர்கள், தங்களை நம்பி வருவோரை ஏமாற்றி விடுகின்றனர்.

சமீபத்தில், கோவையில், ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதாகக் கூறி, வரி ஆலோசகர் ஒருவர், 36 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள், நாடு முழுவதும் நடக்கின்றன.இதனால், வரி செலுத்துவோர் தாங்களே, ஜி.எஸ்.டி., மற்றும் கணக்கு தாக்கல் செய்ய முன்வர வேண்டும்.

ஜி.எஸ்.டி., அலுவலகம் கூறும், செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை போன்றவற்றை, வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டும்.இதன் வாயிலாக, பண மோசடியை தவிர்க்க முடியும். வர்த்தக சங்கங்கள், இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)