பதிவு செய்த நாள்
31 ஜூலை2019
05:11
ஜி.எஸ்.டி., வரி செலுத்துதல் மற்றும் கணக்கு தாக்கல் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட நிறுவனமே தாக்கல் செய்ய வேண்டும் எனவும்; போலி வரி ஆலோசகர்களிடம், பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்றவர்கள், ஜி.எஸ்.டி., வரி செலுத்துதல், கணக்கு தாக்கல் போன்றவற்றை, தாங்களே செய்வதில்லை. இதற்காக, வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்கு தணிக்கையாளர்களை நாடிச் செல்கின்றனர். ஆனால், சில வரி ஆலோசகர்கள், தங்களை நம்பி வருவோரை ஏமாற்றி விடுகின்றனர்.
சமீபத்தில், கோவையில், ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதாகக் கூறி, வரி ஆலோசகர் ஒருவர், 36 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளார். இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள், நாடு முழுவதும் நடக்கின்றன.இதனால், வரி செலுத்துவோர் தாங்களே, ஜி.எஸ்.டி., மற்றும் கணக்கு தாக்கல் செய்ய முன்வர வேண்டும்.
ஜி.எஸ்.டி., அலுவலகம் கூறும், செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை போன்றவற்றை, வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டும்.இதன் வாயிலாக, பண மோசடியை தவிர்க்க முடியும். வர்த்தக சங்கங்கள், இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|