பதிவு செய்த நாள்
31 ஜூலை2019
05:20
புதுடில்லி: நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், 36 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில், 36 சதவீதத்துக்கும் அதிகமான, அதாவது, 6.80 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நாட்டில், மொத்தம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 19 லட்சம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் இருந்த நிறுவனங்களை, செயல்படாத நிறுவனங்களாகக் கருதி, அவற்றின் பதிவை ரத்து செய்ததால், இந்த சதவீதம் அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய இடங்களில் முறையே, 1.42 லட்சம், 1.26 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.தமிழகத்தில் மட்டும் மூடப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை, 2016- – 17ல், 24 சதவீதமாக இருந்தது. இது, 2019 மே மாதத்தில், 44 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|