பதிவு செய்த நாள்
31 ஜூலை2019
05:25
புதுடில்லி: எம்.டி.என்.எல்., - பி.எஸ்.என்.எல்., ஆகிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது, தொலை தொடர்பு துறை.
இது குறித்து, தொலை தொடர்பு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நிதி நெருக்கடியில் உள்ள, எம்.டி.என்.எல்., - பி.எஸ்.என்.எல்., நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இணைப்பு நடவடிக்கை என்பது மீட்பு நடவடிக்கைகளில் ஒன்று தான். வேறு சில வாய்ப்புகள் குறித்தும் அலசப்படுகிறது. குறிப்பாக, விருப்ப ஓய்வுத் திட்டம், சொத்துக்களை பணமாக்குவது, '4ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு ஆகியவை குறித்தும் முயற்சிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், எம்.டி.என்.எல்., நிறுவனத்தால், இனி தனித்து நிற்க இயலாது. இணைப்புக்கு பின், டில்லி மற்றும் மும்பையில், எம்.டி.என்.எல்., நிறுவனமும்; பிற இடங்களில், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் சேவைகளை வழங்கும்.இருப்பினும் இறுதி முடிவெடுக்க வேண்டியது அமைச்சரவை தான்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|