பதிவு செய்த நாள்
01 ஆக2019
06:43
மும்பை, : இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரியை, 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக அதிகரித்ததை மாற்றி, மீண்டும், 10 சதவீதமாக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறையினர் கோரிக்கை வைத்துஉள்ளனர்.
இது குறித்து, அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான உள்நாட்டு கவுன்சிலின் தலைவர், அனந்த பத்மநாபன் கூறியதாவது:அரசு, ஒருபுறம், இந்தியர்களின் கைவினை திறனை, வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வது குறித்து பேசுகிறது. மறுபுறம், திறன் மிகுந்த கைவினைஞர்களை, தொழிலை விட்டுச் செல்லுமளவில் நடந்து கொள்கிறது.தங்கம் மீதான இறக்குமதி வரி, 12.5 சதவீதம்; அத்துடன், 3 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவை சேரும்போது, தங்க நகை விலை அதிகரித்து விடுகிறது.
இது, நுகர்வோர் உணர்வை பாதிக்கும்.இத்துறை, 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. ஆனால், அதிக வரி காரணமாக, பலர் இந்த தொழிலை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|