பதிவு செய்த நாள்
01 ஆக2019
23:45
புதுடில்லி:பார்தி ஏர்டெல் நிறுவனம், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 2 ஆயிரத்து, 866 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 97 கோடி ரூபாய் நிகர லாபத்தை, ஏர்டெல் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.வருவாயைப் பொறுத்தமட்டில், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 20 ஆயிரத்து, 738 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிட்டால், இது, 4.7 சதவீதம் அதிகம் ஆகும். முந்தைய காலாண்டில், வருவாய், 19 ஆயிரத்து, 799 கோடிரூபாயாக இருந்தது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின், நான்காவது காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின், ஒரு வாடிக்கையாளர் மூலமான சராசரி வருமானம், 123 ரூபாயாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 129 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் சரிந்ததற்கு, ரிலையன்ஸ் ஜியோவின் கடும் போட்டி முக்கிய காரணம் என, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|