பதிவு செய்த நாள்
03 ஆக2019
23:26
ஒற்றைச்சாளர முறை திட்டம் துவங்கும் போது, தவறான தகவல்களுடன் நிறைய நிறுவனங்கள் விண்ணப்பித்ததே, அதிக விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்க காரணம் என, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும், ‘தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம்’, கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் வழியாக, புதிய தொழில் நிறுவனம் துவங்குதல், ஏற்கெனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துல், தடையின்மை சான்றிதழ், அனுமதியை புதுப்பித்தல் போன்ற, தொழில் சார்ந்த அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
ஆனால், சில மாதங்களாக, 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், அனுமதி கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.இதுவரை, 76 பெரு நிறுவனங்கள் ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்துள்ளன.இதில், 41 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 35 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 660 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 489 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 171 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒற்றைச்சாளர முறை திட்டம் துவங்கும் போது, நிறைய விண்ணப்பங்கள் தவறான தகவல்களுடன் அனுப்பப்பட்டன.
அதே நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் போது, பழைய விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும்.இது போன்ற விண்ணப்பங்களால், அதிகம் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. எனவே பழைய விண்ணப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஒற்றைச் சாளர முறையில் விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
–நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|