தங்கம் விலை இன்று(ஆக.,3) மேலும் ரூ.264 அதிகரிப்புதங்கம் விலை இன்று(ஆக.,3) மேலும் ரூ.264 அதிகரிப்பு ...  கட்டண குறைப்பு எதிரொலி அரசு கேபிள், ‘டிவி’ நஷ்டம் கட்டண குறைப்பு எதிரொலி அரசு கேபிள், ‘டிவி’ நஷ்டம் ...
தொழில் துவங்குவதற்கான விண்ணப்பங்கள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
23:26

ஒற்றைச்சாளர முறை திட்டம் துவங்கும் போது, தவறான தகவல்களுடன் நிறைய நிறுவனங்கள் விண்ணப்பித்ததே, அதிக விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்க காரணம் என, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



தமிழகத்தில், சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தொழில் துவங்க, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வழியாக அனுமதி பெறும், ‘தமிழ்நாடு வணிகம் எளிதாக்குதல் சட்டம்’, கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் வழியாக, புதிய தொழில் நிறுவனம் துவங்குதல், ஏற்கெனவே உள்ள நிறுவனத்தை விரிவுபடுத்துல், தடையின்மை சான்றிதழ், அனுமதியை புதுப்பித்தல் போன்ற, தொழில் சார்ந்த அனைத்து வசதிகளையும் பெற முடியும்.



ஆனால், சில மாதங்களாக, 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், அனுமதி கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.இதுவரை, 76 பெரு நிறுவனங்கள் ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்துள்ளன.இதில், 41 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 35 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.



சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 660 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 489 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 171 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒற்றைச்சாளர முறை திட்டம் துவங்கும் போது, நிறைய விண்ணப்பங்கள் தவறான தகவல்களுடன் அனுப்பப்பட்டன.



அதே நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் போது, பழைய விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும்.இது போன்ற விண்ணப்பங்களால், அதிகம் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. எனவே பழைய விண்ணப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஒற்றைச் சாளர முறையில் விரைவில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


–நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)