கட்டண குறைப்பு எதிரொலி அரசு கேபிள், ‘டிவி’ நஷ்டம் கட்டண குறைப்பு எதிரொலி அரசு கேபிள், ‘டிவி’ நஷ்டம் ... இந்தியர்களின்  வீட்டுக்கடன்  சுமை அதிகரிப்பு இந்தியர்களின் வீட்டுக்கடன் சுமை அதிகரிப்பு ...
வங்கி தலைவர்களுடன் நிதியமைச்சர் நாளை சந்திப்பு:தனியார் துறை வங்கிகளுக்கும் அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
23:33

புதுடில்லி:மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை, நாளை சந்தித்துப் பேச உள்ளார்.



இந்த சந்திப்பில், வாகனத் துறை, வீட்டுவசதித் துறை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை ஆகியவற்றுக்கு கடன் வழங்குவது குறித்து, மறு ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.



பொதுவாக, நிதியமைச்சர், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன் மறு ஆய்வு கூட்டத்தை நடத்துவார். ஆனால், இந்த முறை, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், முக்கிய துறைகளில், கடன் வளர்ச்சி தொடர்பான விஷயங்கள் மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிகிறது.



அதாவது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வாகனத் துறை, வீட்டுவசதித் துறை, சில்லரை விற்பனை துறை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் கடன் வளர்ச்சி குறித்து அலசப்படும். மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை அதிகரிப்பதற்காக, வங்கி துறையில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.



இது குறித்து, நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக, பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மட்டும் அழைக்கப்படுவார்கள். ஆனால், இம்முறை தனியார் வங்கி தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி, இம்முறை, வருவாய் துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை ஆகியவற்றின் செயலர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.



மேலும், நிதியமைச்சர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான, யு.கே.சின்ஹா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, பிற அமைச்சகங்களின் பிரதிநிதிகளுடன், ஒரு கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டுள்ளார்.யு.கே.சின்ஹா குழு, கடந்த ஜூன் மாதத்தில், தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.



அந்த அறிக்கையில், நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.கடன், பங்கு நிதி, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், பணம் செலுத்துவதில் உள்ள தாமதங்கள், நிறுவன ஏற்பாடுகள், சட்ட மாற்றங்கள், கிராமப்புற நிறுவனங்கள், இடர் குறைப்பு என பல்வேறு விஷயங்கள் குறித்தான பரிந்துரைகளை, சின்ஹா குழு வழங்கி உள்ளது.



குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில், அவற்றுக்காக, அரசு, தனியே நிதியை ஏற்படுத்தவேண்டும் எனவும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு, ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்களின் பிரதிநிதிகளை, நிதியமைச்சர் சந்திக்க இருக்கிறார்.




இந்த சந்திப்புகள் ஒருபுறமிருக்க, அவசர பொருளாதார பிரச்சினைகள் குறித்தும், பட்ஜெட் அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்தும், தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளின் செயலர்களுடன், தினமும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார், நிதியமைச்சர்.நாளை நடக்க இருக்கும் சந்திப்பில், பல பிரச்னைகளை சமாளிப்பது குறித்து, முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)