இந்தியர்களின்  வீட்டுக்கடன்  சுமை அதிகரிப்புஇந்தியர்களின் வீட்டுக்கடன் சுமை அதிகரிப்பு ...  தேரை எல்லோரும் இழுக்க வேண்டும் தேரை எல்லோரும் இழுக்க வேண்டும் ...
ஆயுள் காப்­பீட்டு பாலி­சி­க­ளுக்கு புதிய நெறி­மு­றை­கள் அறி­மு­கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2019
23:50

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான புதிய நெறிமுறைகளால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பாலிசிதாரர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என, கருதப்படுகிறது.


இந்­திய காப்­பீடு ஒழுங்­கு­முறை மற்­றும் மேம்­பாட்டு ஆணை­ய­மான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., பாலி­சி­க­ளுக்­கான புதிய நெறி­மு­றை­களை வெளி­யிட்­டுள்­ளது. அண்­மை­யில் இந்த நெறி­மு­றை­கள் அறிவிக்கையாகவெளி­யி­டப்­பட்­டன.


‘டெர்ம் திட்­டங்­கள், எண்­டோ­மெண்ட், யூலிப் பாலி­சி­கள், பென்­ஷன்’ திட்­டங்­கள் உள்­ளிட்­டவற்­றுக்கு இந்த நெறி­மு­றை­கள் பொருந்­தும். புதிய நெறி­மு­றை­கள் பாலி­சி­க­ளின் அம்­சங்­களில் பல்­வேறு மாற்­றங்­களை கொண்டு வரும் வகை­யில் அமைந்­துள்­ளன. இந்த மாற்­றங்­கள், பெரும்­பா­லும், பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு பலன் அளிக்­கும் வகை­யில் அமைந்­தி­ருப்­ப­தாக காப்­பீடு துறை வல்­லு­னர்­கள் கரு­து­கின்­ற­னர்.


காப்­பீடு திட்­டங்­களை புதுப்­பிக்­கும் காலம் உயர்த்­தப்­பட புதிய நெறி­முறை­கள் வழி செய்­துள்­ளது. பாலி­சிதா­ரர் பிரி­மி­யம் செலுத்த தவறி, அதற்­கான சலுகை கால­மும் முடிந்த பாலிசி காலா­வ­தி­யான பின், அதை புதுப்­பித்­துக்­கொள்ள காப்­பீடு நிறு­வ­னம் அளிக்­கும் அவ­கா­சம், புதுப்­பிக்­கும் கால­மாக அமை­கிறது.


யூலிப் வகை பாலி­சி­க­ளுக்கு இந்த அவ­கா­சம், தற்­போ­துள்ள இரண்டு ஆண்­டு­களில் இருந்து மூன்று ஆண்­டு­க­ளாக உயர்த்­தப்பட்­டுள்­ளது. யூலிப் அல்­லாத வழக்­க­மான பாலி­சி­க­ளுக்கு இந்த காலம் இரண்டு ஆண்­டில் இருந்து ஐந்து ஆண்­டாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. பாலிசி காலாவ­தி­யான மூன்று மாத காலத்­திற்­குள் காப்­பீடு நிறு­வ­னம் இது பற்றி பாலி­சி­தாரருக்கு நினை­வூட்ட வேண்­டும்.


யூலிப் திட்­டங்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச காப்­பீடு பாது­காப்பு, 10மடங்­கில் இருந்து ஏழு மடங்­காக குறைக்­கப்­பட்­டுள்­ளது.பாலி­சி­களில் சரெண்­டர் மதிப்பை பெறு­வ­தற்­கான கால­மும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. பாலி­சி­யில் இருந்து முன்­கூட்­டியே வெளி­யே­றும் போது, வழங்­கப்­படும் தொகை இவ்­வாறு குறிப்­பி­டப்­ப­டு­கிறது.


குறிப்­பிட்ட காலத்­திற்கு பிரி­மி­யம் செலுத்­தி­யி­ருந்­தால் மட்­டுமே, பாலி­சியை ஒப்­ப­டைத்து இந்த மதிப்பை பெற முடி­யும். தற்­போது இது மூன்று ஆண்­டாக இருக்­கிறது. புதிய நெறி­மு­றை­க­ளின் படி இது இரண்டு ஆண்­டு­க­ளாக குறைக்­கப்பட்­டுள்­ளது. இரண்டு ஆண்டு பிரி­மி­யம் செலுத்­தி­னால், சரெண்­டர் மதிப்பை கோர­லாம்.


பாலி­சிக்­கான பிரி­மி­யம் தொகையை குறைத்­துக்­கொள்­ளும் வாய்ப்­பும் பாலி­சி­தா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஐந்து ஆண்டு பாலிசி தொகை செலுத்­திய பின், பிரி­மி­யம் தொகையை, 50 சத­வீ­தம் வரை குறைத்­துக்­கொள்­ள­லாம். அதற்­கேற்ப காப்­பீடு பாது­காப்­பும் குறை­யும். காப்­பீடு நீண்ட கால பொறுப்பு என்­ப­தால், இடையே நிதி நெருக்­கடி ஏற்­பட்­டால், பிரி­மி­யம் தொகையை குறைத்­துக்­கொண்டு, பாலி­சியை தொடர இந்த மாற்­றம் வழி செய்­யும்.


பென்­ஷன் திட்­டங்­களை பொருத்­த­வரை, முதிர்வு காலத்­தில் விலக்கி கொள்­ளும் தொகை, மூன்­றில் ஒரு பகு­தி­யில் இருந்து, 60 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் மூன்­றில் ஒரு பகுதி விலக்­கல் தொகைக்கு மட்­டுமே வரிச்­ச­லுகை பொருந்­தும். முன்­கூட்­டிய விலக்கு கொள்­வ­தற்­கும் விதி­மு­றை­களில் சிறிய மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. ஐந்து ஆண்டு லாக் இன் காலத்­திற்கு பின், உயர் கல்வி, திரு­ம­ணம், மருத்­துவ தேவை போன்­ற­வற்­றுக்கு இரண்டு முறை மட்­டும், 25 சத­வீத தொகையை முன்­கூட்­டியே விலக்கி கொள்ள முடி­யும்.


இந்த புதிய நெறி­மு­றை­கள் ஆணை­யத்­தின் இணை­ய­த­ளத்­தில் அறி­விக்­கை­யாக வெளி­யி­டப்­பட்­டு உள்­ளன. இந்த நெறி­மு­றை­களை அமல் செய்­யும் காலம் மற்­றும் வழி­முறை தொடர்­பான விப­ரங்­களை ஆணை­யம் விரை­வில் வெளி­யி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)