பதிவு செய்த நாள்
07 ஆக2019
23:28
திருப்பூர்:ஆடை ஏற்றுமதியில், திருப்பூருக்கு கடும் போட்டியாக திகழும் வங்கதேசத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத, 400 நிறுவனங்களுக்கு, மேற்கத்திய நாடுகளின், ‘ஆர்டர்’களை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், 2013ல், ஆயத்த ஆடை ஒன்றில் நிறுவனம் ஏற்பட்ட தீ விபத்தில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து, ஐரோப்பிய நிறுவனங்கள், தீ தடுப்பு மற்றும் கட்டட பாதுகாப்பு தொடர்பாக, வங்கதேசத்துடன் ஐந்தாண்டுக்கான ஒப்பந்தம் செய்தன.இது தொடர்பாக, ஒரு குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 1,600 நிறுவனங்களில், 200 நிறுவனங்கள் மட்டுமே, உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, மேற்கத்திய நிறுவனங்களிடம் ஆர்டர்களை பெறுவதற்கு, 400 நிறுவனங்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திருப்பூர் தொழில் துறையினர் கூறியதாவது:வங்கதேச தொழிலகங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்பது, நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது. இருப்பினும், திருப்பூருடன் ஒப்பிடும்போது, அங்கு உற்பத்தி செலவு குறைவு. பல்வேறு நாடுகளுடனான, வரியில்லா சலுகையை, வங்கதேசம் பயன்படுத்திக் கொள்கிறது.
வங்கதேசத்தில், 400 நிறுவனங்களுக்கான தடை, நம் நாட்டின் ஆடை உற்பத்தியாளர்களுக்கு பெரும் சாதகமாக அமைய வாய்ப்பிருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|