4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு ... தங்கம் விலை இன்றும் உயர்வு தங்கம் விலை இன்றும் உயர்வு ...
வர்த்தகம் » ஜவுளி
வங்கதேச நிறுவனங்களுக்கு தடை :திருப்பூருக்கு சாதகமாக அமையுமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
23:28

திருப்பூர்:ஆடை ஏற்றுமதியில், திருப்பூருக்கு கடும் போட்டியாக திகழும் வங்கதேசத்தில், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத, 400 நிறுவனங்களுக்கு, மேற்கத்திய நாடுகளின், ‘ஆர்டர்’களை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


வங்கதேசத்தில், 2013ல், ஆயத்த ஆடை ஒன்றில் நிறுவனம் ஏற்பட்ட தீ விபத்தில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து, ஐரோப்பிய நிறுவனங்கள், தீ தடுப்பு மற்றும் கட்டட பாதுகாப்பு தொடர்பாக, வங்கதேசத்துடன் ஐந்தாண்டுக்கான ஒப்பந்தம் செய்தன.இது தொடர்பாக, ஒரு குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இதில், 1,600 நிறுவனங்களில், 200 நிறுவனங்கள் மட்டுமே, உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, மேற்கத்திய நிறுவனங்களிடம் ஆர்டர்களை பெறுவதற்கு, 400 நிறுவனங்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து, திருப்பூர் தொழில் துறையினர் கூறியதாவது:வங்கதேச தொழிலகங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதில்லை என்பது, நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது. இருப்பினும், திருப்பூருடன் ஒப்பிடும்போது, அங்கு உற்பத்தி செலவு குறைவு. பல்வேறு நாடுகளுடனான, வரியில்லா சலுகையை, வங்கதேசம் பயன்படுத்திக் கொள்கிறது.


வங்கதேசத்தில், 400 நிறுவனங்களுக்கான தடை, நம் நாட்டின் ஆடை உற்பத்தியாளர்களுக்கு பெரும் சாதகமாக அமைய வாய்ப்பிருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)