பதிவு செய்த நாள்
09 ஆக2019
23:32
புதுடில்லி:வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதமாக, உடனே குறைக்க வேண்டும் என, ஒட்டுமொத்த வாகன துறையினர் கோருவதாக, ‘சியாம்’ அமைப்பு தெரிவித்து உள்ளது.
‘சியாம்’ எனும், ‘இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம்’ இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:சமீபத்தில், நிதியமைச்சருடனான சந்திப்பின் போது, அதில் பங்கேற்ற வாகன துறை சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள், வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஒருமனதாக முன்வைத்தனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
ஜி.எஸ்.டி.,யை குறைப்பது குறித்து, வாகன தயாரிப்பாளர்களிடையே, இரு வேறு கருத்துகள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில், இந்த அறிவிப்பை, சியாம் அமைப்பு வெளியிட்டுள்ளது.
‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர், ராஜீவ் பஜாஜ், ‘பாரத் ஸ்டேஜ் – 6’ அறிமுகத்தின் நெருக்கத்தில், ஜி.எஸ்.டி., குறைப்பை வைத்துக் கொண்டால், வாகன விலை உயர்வை சற்று தடுப்பதாக அது அமையும் என தெரிவித்திருந்ததாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாகவே, இந்த அறிவிப்பை சியாம் வெளியிட்டுஉள்ளது.தற்போது, வாகனங்களுக்கு, 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வரி, 1 சதவீதம் முதல், 22 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|