பதிவு செய்த நாள்
09 ஆக2019
23:38
சென்னை:‘‘வரும் 2020க்குள், 2,000 பைக்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்,’’ என, ‘பெனெல்லி இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், விகாஸ் ஜாபக் தெரிவித்தார்.
இந் நிறுவனத்தின், ‘லியன்சினோ’ என்ற புதிய பைக்கை, அவர் சென்னையில் அறிமுகம் செய்து கூறியதாவது:பெனெல்லி பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. 500 சி.சி., திறன் கொண்ட, லியன்சினோ பைக்கின் விலை, 4.79 லட்சம் ரூபாய். இந்திய வாடிக்கையாளர்களுக்காகவும், விற்பனையை அதிகரிக்கவும், உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டிற்குள், 2,000 பைக்குகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது, 19 டீலர்கள் உள்ளனர். தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையில், தலா ஒரு டீலர் வீதம் உள்ளனர். இந்த ஆண்டுக்குள், 13 டீலர்கள் வரை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, விகாஸ் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|