தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு தொழில் துறை உற்பத்தி 2 சதவீதமாக சரிவு ...  சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார்  வழங்கும் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் ஒரே எண்ணம் தான்!தொழில் துறையினர் மத்தியில் நிதியமைச்சர் உரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2019
23:41

புதுடில்லி:பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரே மாதிரியான எண்ணத்துடன் செயல்படுவதாக, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



இந்திய தொழில் அமைப்பான, சி.ஐ.ஐ., நடத்திய தேசிய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று, தொழில் துறை தலைவர்போது, அவர் இவ்வாறு கூறினார்.தொழில் துறை சம்பந்தமான அரசின் நடவடிக்கைகள் குறித்து, நிதியமைச்சர், மேலும் கூறியதாவது:சிறிது மந்த நிலை ஏற்பட்டாலும், இந்திய பொருளாதாரம், வேகமாக வளரு வதாகவே இருக்கிறது.



அரசும் ரிசர்வ் வங்கியும் நல்லுறவுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படுவதால், முதலீடு களை மேலும் ஊக்குவிப்பதற்கான சூழலை விரைந்து ஏற்படுத்த முடியும் என, கருதுகிறேன். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகள் குறித்து, ரிசர்வ் வங்கியும், அரசும் ஒரே எண்ணத்தில் செயல்படுகின்றன. ரிசர்வ் வங்கிக்கும், அரசுக்கும் இடையே, உறுதியான நல்லுறவு கொண்ட சூழலே உள்ளது.



நிதித்துறை சம்பந்தமான பிரச்னைகளை, அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அவை அனைத்தும், விரைவில் நிவர்த்தி செய்யப்படும். இப்பிரச்னைகளை சமாளிக்க, வரும் வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.சி.எஸ்.ஆர்., எனும், நிறுவனங்களின் சமூக பொறுப்பு தொடர்பான விஷயங்களில், தண்டனை விதிகள் குறித்து, அரசு மறுபரிசீலனை செய்யும்.



தொழில் துறையினர் யாரையும், கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை.அடுத்த வாரம் முதல், நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, தொழில் துறை பிரதிநிதிகளைச் சந்திக்க இருக்கிறேன்.இதன் மூலம், வரி துன்புறுத்தல்கள் எங்கு நடக்கிறது என்பதை அறிந்து, அதை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உடனே உத்தரவிடப்படும். இதுமட்டுமின்றி, வரி விஷயங்களில் யாராவது துன்புறுத்தப்படுகின்றனரா என்பதை, அறிந்துகொள்ளும் வகையில், அதற்கென தனியான தொழில்நுட்ப அடிப்படையிலான வசதிகள் ஏற்படுத்தப்படும்.



வரி விதிப்பை பொறுத்தவரை, கார்ப்பரேட் வரியை குறைப்பதே அரசின் நோக்கம். ஆனால், அது நடக்கும் வரை, தொழில் துறையினர் காத்திருக்க வேண்டும்.அரசு துறை, மற்றும் ஏஜென்சிகளிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை பிரச்னையை தீர்க்கும் பணியிலும் தற்போது நான் ஈடுபட்டு உள்ளேன்.இவ்வாறு, நிர்மலா சீதாராமன் பேசினார்.



சாராம்சம்



* மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரே மாதிரியான எண்ணத்துடன் செயல்படுகின்றன


* முதலீடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்



* நிதித் துறை சம்பந்தமான பிரச்னைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்


*சி.எஸ்.ஆர்., விஷயங்களில் தண்டனை விதிகள் குறித்து பரிசீலிக்கப்படும்


* தொழில் துறையினரை கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை


* வரி துன்புறுத்தல்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்


* கார்ப்பரேட் வரியை குறைப்பதே அரசின் நோக்கம்


* அரசின் நிலுவைத் தொகை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)