சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார்  வழங்கும் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை ...  கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும்  அதிர்ச்சி தகவல்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடனை வசூலிக்க எஸ்.பி.ஐ, சிறப்பு முகாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
00:03

நீண்ட கால வாராக் கடன்களை வசூலிக்க, எஸ்.பி.ஐ., எனும் பாரத ஸ்டேட் வங்கி, ஓ.டி.எஸ்.. எனும் ஒரே தவணையில் கடன் செலுத்தும் முகாமை அறிமுகம் செய்துள்ளது.



வாராக் கடனை வசூலிக்க, ஒரே தவணையில் கடனை திரும்பச் செலுத்தும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளதாவது: பொருளாதார தேக்க நிலை, பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களால், கடன் பெற்றவர்கள், அதை திரும்பச் செலுத்த தவறுகின்றனர்.



இதனால், வங்கியில் வாராக் கடன் அளவு அதிகரிக்கிறது. இதில், சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் போன்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், அதிகம் உள்ளனர்.இவர்கள், தங்களது மொத்த தொகையையும், திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இவர்களுக்காக, 2019 – 20ம் நிதியாண்டுக்கான, ஒரே தவணையில் செலுத்தும் திட்டம், ஆக., 1 முதல் டிச., 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.



இதன்படி, 20 லட்சம் ரூபாய் வரை, தகுதி உள்ள கடனாளர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 2018 டிச., 31 வரை, 3 லட்சம் ரூபாய் வரை விவசாயக் கடன் பெற்றவர்கள், 4 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் பெற்றவர்கள், சிறு, குறு, தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இந்த முகாமில் தங்களது நிலுவை கடன் தொகையை திரும்பச் செலுத்தி, பயன் பெறலாம்.



மேலும், மத்திய அரசு திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் பெற்றவர்களில், 5 லட்சம் ரூபாய் வரை வாராக் கடன் பிரிவில் உள்ளவர்களும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இது குறித்து, வங்கி கிளைகளில் மேலும் விபரங்களை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)