பதிவு செய்த நாள்
11 ஆக2019
00:03
நீண்ட கால வாராக் கடன்களை வசூலிக்க, எஸ்.பி.ஐ., எனும் பாரத ஸ்டேட் வங்கி, ஓ.டி.எஸ்.. எனும் ஒரே தவணையில் கடன் செலுத்தும் முகாமை அறிமுகம் செய்துள்ளது.
வாராக் கடனை வசூலிக்க, ஒரே தவணையில் கடனை திரும்பச் செலுத்தும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளதாவது: பொருளாதார தேக்க நிலை, பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு காரணங்களால், கடன் பெற்றவர்கள், அதை திரும்பச் செலுத்த தவறுகின்றனர்.
இதனால், வங்கியில் வாராக் கடன் அளவு அதிகரிக்கிறது. இதில், சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் போன்ற பிரிவைச் சேர்ந்தவர்கள், அதிகம் உள்ளனர்.இவர்கள், தங்களது மொத்த தொகையையும், திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இவர்களுக்காக, 2019 – 20ம் நிதியாண்டுக்கான, ஒரே தவணையில் செலுத்தும் திட்டம், ஆக., 1 முதல் டிச., 31ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி, 20 லட்சம் ரூபாய் வரை, தகுதி உள்ள கடனாளர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 2018 டிச., 31 வரை, 3 லட்சம் ரூபாய் வரை விவசாயக் கடன் பெற்றவர்கள், 4 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் பெற்றவர்கள், சிறு, குறு, தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இந்த முகாமில் தங்களது நிலுவை கடன் தொகையை திரும்பச் செலுத்தி, பயன் பெறலாம்.
மேலும், மத்திய அரசு திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் பெற்றவர்களில், 5 லட்சம் ரூபாய் வரை வாராக் கடன் பிரிவில் உள்ளவர்களும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இது குறித்து, வங்கி கிளைகளில் மேலும் விபரங்களை, வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|