சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார்  வழங்கும் சலுகை சுதந்திர தினத்தை ஒட்டி பிக்பஜார் வழங்கும் சலுகை ...  வரி, ‘ரீபண்ட்’ நிலையை  அறிவது எப்படி வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி ...
கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
00:11

புதுடில்லி:நாட்டில், 67 சதவீதம்பேர், தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்வதற்காக, கடன் வாங்கவும் தயாராக இருப்பது, ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.


நுகர்வோருக்கு நிதி உதவி வழங்கும், ‘ஹோம் கிரெடிட் இந்தியா’ நிறுவனம், கடன் வாங்குவது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வு குறித்த அறிக்கையில், கூறப்பட்டு உள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், ‘மொபைல் போன், ரெப்ரிஜிரேட்டர், டிவி’ போன்ற நுகர்பொருள் சாதனங்களை வாங்கும் பொருட்டு, கடன் வாங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



இதற்கடுத்து, இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு, 23.3 சதவீதம் பேரும், தனிநபர் கடன் வாங்குவதற்கு, 20.3 சதவீதம் பேரும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அடுத்து, கார் கடன் வாங்க தயாராக இருப்பதாக, 12.5 சதவீதம் பேரும், வீடு வாங்குவதற்காக, 12 சதவீதம் பேரும், தங்கம் வாங்குவதற்காக, 10.5 சதவீதம் பேரும் தயாராக இருப்பது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.



எதிர்கால கடன் அபிப்பிராயங்கள் குறித்து கேட்டபோது, நுகர்பொருள் சாதனங்கள் வாங்க, 33 சதவீதம் பேரும், தனிநபர் கடன் வாங்க, 28 சதவீதம் பேரும், இருசக்கர வாகனம் வாங்க, 22.8 சதவீதம் பேரும் ஆர்வமாக இருப்பது தெரிய வந்துள்ளது.நுகர் பொருட்கள் வாங்க கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்க தயாராக இருந்தாலும், விவசாயக் கடன், சுற்றுலா கடன் போன்றவற்றை வாங்குவதற்கான ஆர்வம் குறைவாகவே உள்ளது.



விவசாயக் கடன் வாங்க, 0.7 சதவீதம் பேரும், கிரெடிட் கார்டு மூலமான மாதாந்திர தவணை கடன் வாங்க, 1.1 சதவீதம் பேரும், பயணங்களுக்கான கடன் வாங்க, 1.5 சதவீதம் பேரும், மருத்துவக் கடன் வாங்க, 3.7 சதவீதம் பேரும் என, குறைவான எண்ணிக்கையிலானவர்களே ஆர்வமாக உள்ளனர்.


கடன் வாங்கும்போது, 34 சதவீதம் பேர், நண்பர்களின் அறிவுரைப்படி வாங்குவதாக தெரிவித்து உள்ளனர். 31.8 சதவீதம் பேர், குடும்பத்தினர் ஆலோசனைப்படியும், 25.4 சதவீதம் பேர், உடன் பணிபுரிபவர்களின் ஆலோசனைப்படியும், கடன் வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ஹோம் இந்தியாவின் மார்க்கெட்டிங் பிரிவின் தலைமை அதிகாரி, மார்கோ கேர்விக் கூறியதாவது:குடும்பத்தினரின் ஆசை, தேவை ஆகியவற்றை நிறைவேற்றும் பொருட்டே, பெரும்பாலானவர்கள் கடன் வாங்குவதாக தெரிவித்துள்ளனர்.



தங்கள் சொந்த தேவைகளை விட, குடும்பத்தினரின் விருப்பம் மற்றும் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை, 46 சதவீதமாக உள்ளது.இருப்பினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள், கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது குறித்து நல்ல அபிப்பிராயத்துடன் இல்லை. அதனால், அவர்கள், இதற்கு முன், இத்தகைய காரணங்களுக்காக கடன் வாங்கியதில்லை என்கின்றனர்.



குடும்பத்திற்கு முதலிடம்



குடும்ப தேவை மற்றும் விருப்பங்களுக்காக கடன் வாங்குவதில், பாட்னாவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதற்கடுத்து லக்னோ, நாக்பூர், ஜெய்ப்பூர் ஆகியவை உள்ளன.


கடன் குறித்த ஆலோசனை


நண்பர்களிடம் : 34 சதவீதம்குடும்பத்தினரிடம் : 31.8 சதவீதம்உடன் பணிபுரிபவர்களுடன் : 25.4 சதவீதம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)