கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும்  அதிர்ச்சி தகவல்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியர்கள் : ஆய்வறிக்கை சொல்லும் ... ...  வரி, ‘ரீபண்ட்’ நிலையை  அறிவது எப்படி வரி, ‘ரீபண்ட்’ நிலையை அறிவது எப்படி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எஸ்.ஐ.பி., முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
00:01

சந்தையின் போக்கு சிறு முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துவதாக அமைந்தாலும், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்துள்ளவர்கள், தங்கள் முதலீட்டை அதிகமாக்குவது ஏற்ற உத்தியாக அமையும்.பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாகி வருகிறது.



சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மட்டும் அல்லாமல், மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி கடந்த ஒரு மாதத்தில், 8 சதவீதம் சரிந்துள்ளது. பங்குச்சந்தை மொழியில் இதை, ‘கரெக்‌ஷன்’ ஏற்பட்டுள்ளது என்கின்றனர். முதலீட்டாளர்களை பொருத்தவரை இந்த கரெக்‌ஷன் இன்னும் எந்த அளவு நீடிக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது.



இன்னொரு பக்கம் பார்த்தால், பொருளாதார அம்சங்கள் சாதகம் இல்லாமல் இருக்கின்றன. வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விற்பனை தேக்கத்தை எதிர்கொண்டுள்ளன. ஐ.எல்.எப்.எஸ்., மற்றும் டி.எச்.எப்.எல்., ஆகிய வங்கி சாரா நிதி நிறுவங்களின் பிரச்னையும் நிதித்துறையில் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. இந்த சூழ்நிலை சிறு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தையும், கவலையையும் அவசர முடிவுகளை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.



நல்ல பங்குகளை வைத்திருப்பவர்கள் அதை தொடர வேண்டும். மோசமான சூழலிலும் தாக்குபிடிக்க கூடிய வகையில் அடிப்படை அம்சங்கள் வலுவாக கொண்டுள்ள பங்குகளை தொடரலாம். நல்ல துறைகளை தேர்வு செய்து முதலீட்டை பரவலாக்கும் உத்தியையும் மேற்கொள்ளலாம். மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களை பொருத்தவரை, சந்தையில் சரிவான போக்கால், எஸ்.ஐ.பி., மூலமான முதலீட்டை நிறுத்திவிடும் தவறை செய்துவிடக்கூடாது என வல்லுனர்கள் கூறுகின்றனர்.



சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மண்ட் பிளான், மியூச்சுவல் பண்ட்களில் குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட தொகையை சீராக முதலீடு செய்ய வழி செய்கிறது. தற்போது, ஒரு சில மியூச்சுவல் பண்ட் அளிக்கும் பலன்கள் குறைந்திருந்தாலும், எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்திவிடக்கூடாது என்கின்றனர்.



எஸ்.ஐ.பி., முதலீட்டில், சந்தை ஏறுமுகத்தில் இருந்து, மியூச்சுவல் பண்ட்கள் யூனிட்களின் என்.ஏ.வி., அதிகமாக இருக்கும் போது குறைவான யூனிட்கள் வாங்கப்படுகின்றன. அதே நேரத்தில் சந்தை சரிவுக்குள்ளாகும் போது, என்.ஏ.வி குறைவாக இருக்கும் என்பதால் அதிக யூனிட்கள்: வாங்கப்படுகின்றன. பின்னர் மீண்டும் சந்தை ஏறுமுகம் காணும் போது, இந்த யூனிட்கள் அதிக பலன் அளிக்கும். எனவே, இது அதிக யூனிட்கள் வாங்குவதற்கான வாய்ப்பு என்பதால், சரிவுக்கு அஞ்சி, முதலீட்டை விலக்கி கொள்வது எதிர்பார்த்த பலனை அளிக்காது.



இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எஸ்.ஐ.பி., முதலீட்டை அதிகமாக்கும் உத்தியையும் பின்பற்றலாம். இந்த முறைக்கு, டெப்ட் பண்ட், ஹைப்ரிட் பண்ட் போன்றவற்றை விட, சமபங்கு நிதிகள் ஏற்றவை என கருதப்படுகிறது. இந்த வகை நிதிகளில், முதலீட்டாளர் தனது இடர் தன்மைக்கேற்ற நிதியை தேர்வு செய்யலாம். பெரிய தொகை இருந்தால், அதை, ‘லிக்விட் பண்டில்’ முதலீடு செய்து, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை. எஸ்.டி.பி., முறையில் எஸ்.ஐ.பி., முதலீடாக மாற்றும் உத்தியையும் கடைப்பிடிப்பது ஏற்றதாக அமையும்.


‘சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்’ என்பது, குறிபிட்ட தொகையை, மாதந்தோறும் சமபங்கு நிதிக்கு மாற்றும் வழியாகும். இதுவும் எஸ்.ஐ.பி., போலவே செயல்பட்டும் பலன் அளிக்க வல்லது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)