பதிவு செய்த நாள்
12 ஆக2019
00:08
தேசிய
பங்குச் சந்தை குறியீட்டு எண், ’நிப்டி’, ஐந்து வார தொடர் சரிவுக்குப்
பின், கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகமாகி, முடிவுற்றது. கடந்த வாரம்,
நாம் குறிப்பிட்டிருந்தது போல, 100 வார சராசரி அளவான,10,780
புள்ளிகள் என்ற நிலையைத் தொட்டு, அதிலிருந்து உயர்ந்து,
வர்த்தகமாகி முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.
அதாவது, வார இறுதியில், மொத்தம், 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 11,109 என்ற நிலையில் வர்த்தகமாகி முடிவுற்றது.இந்த
ஆண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், நாட்டின் வாகன
விற்பனை துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கனரக வாகனங்கள்
முதல் பயணியர் வாகனங்கள் வரை, அனைத்து வகை வாகனங்கள்
விற்பனையிலும் சரிவு ஏற்பட்டது.
இதனால், வாகன தயாரிப்பில்
ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும்
நிறுவனங்கள், இத்துறையைச் சார்ந்திருக்கும் பிற நிறுவனங்கள்
ஆகியவற்றின் பங்குகளின் விலை, கடந்த, 6 மாதங்களில் கடுமையாக
சரிந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் பெரும் பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளனர். பொதுவாக, வாகன விற்பனை சரிவு என்பது, நுகர்வோர்
மத்தியில், வாங்கும் திறன் குறைவாகவும், பணவீக்க விகிதம்
அதிகரித்து இருப்பதையும் சுட்டிக் காட்டும்.
மேலும்,
பங்குகளின் விலை சரிவுக்கு காரணமாக இருந்த, அன்னிய
முதலீட்டாளர்களின் அதிகமான வருவாய் மீது, மத்திய பட்ஜெட்டில்
கொண்டுவரப்பட்ட புதிய வரி விதிப்பு காரணமாக, ஜூலை மாதத்தில்
பெரும்பாலான வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளைத்
திரும்பப் பெற்றனர்.இதன் காரணமாக, சந்தை, கடுமையான சரிவை சந்தித்தது, குறிப்பிடத்தக்கது.
கடந்த
வாரம், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சகம் இப்பிரச்னை
குறித்து பரிசீலித்து வருவதாக அறிவித்தது. இதன் காரணமாக, வார இறுதி
நாட்களில், பங்குச் சந்தைகள், சரிவில் இருந்து மீண்டு, அதிகரித்து
வர்த்தகம் ஆகின.வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்,
ஜி.எஸ்.டி.,யை குறைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தற்போது, 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இதை, 18
சதவீதமாகக் குறைக்க வேண்டும் என, வாகன தயாரிப்பாளர்கள் அமைப்பு
கோரிக்கை வைத்துள்ளது.
இந்திய பொருளாதாரம், தற்போது வளர்ச்சிப்
பாதையில் இருந்து விலகி, மந்தமான போக்கில் இருப்பது, ரிசர்வ் வங்கி
தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைப்பதிலிருந்து அறிந்துகொள்ள
முடிகிறதுஇந்த ஆண்டில், இதுவரை, 4 முறை வட்டி விகிதம்
குறைக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த, 7ம் தேதி, எதிர்பார்த்ததை விட,
10 புள்ளிகள் அதிகமாக குறைக்கப்பட்டது.
தற்போதைய, ரெப்போ வட்டி விகிதம், 2010ம் ஆண்டில் இருந்த வட்டி விகிதத்திற்கு நிகராக குறைந்துள்ளது.டாலருக்கு
நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர் சரிவில் இருக்கிறது.
தற்போது, 70 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் சூழலில், அதிக கச்சா
எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நாம் இருப்பதால், நாட்டின்,
நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்ற நிலையே
தற்போது உள்ளது.
சர்வதேச அளவில், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய
நாடுகளுக்கு இடையே நடந்து வந்த வர்த்தக மோதல், மீண்டும்
தலைதுாக்கியுள்ளது. இம்மாத ஆரம்பத்தில், அமெரிக்க அதிபர், 60
பில்லியன் டாலர் மதிப்பிலான, புதிய இறக்குமதி வரியை, சீனப்
பொருட்களின் மீது விதித்தார்.இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும்
இடையே மீண்டும் வர்த்தகப் போர் துவங்கியுள்ளது. கடந்த வெள்ளியன்று,
சுமூகப் பேச்சுவார்த்தைக்கு சீனா உடன்பட்டிருந்த நிலையில்,
அமெரிக்க அதிபர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், வட்டி விகிதத்தை மீண்டும் குறைக்குமாறு, அமெரிக்க மத்திய வங்கிக்கு வேண்டுகோளும் வைத்துள்ளார்.இந்த வாரம், நிப்டியைப் பொருத்தவரை, அதன் ரெசிஸ்டென்ட்ஸ், 11,140 மற்றும் 11,230 ஆகும். சப்போர்ட் 11,055, 10,980 ஆகும்.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|