பதிவு செய்த நாள்
12 ஆக2019
00:11
கச்சா எண்ணெய்
சர்வதேச
சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த, 4 வாரங்களாக சரிவில்
வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், கடந்த வார இறுதி நாட்களில்,
விலை உயர்ந்து வர்த்தகமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகின்,
இரண்டாம் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான, சவுதி அரேபியா,
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் சூழலில், விலை சரிவைக்
கட்டுப்படுத்தும் நோக்குடன், சில முடிவுகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, அடுத்த மாதத்திற்கான ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தங்களை, இந்நாடு குறைத்து வருகிறது.
இதன்
காரணமாக, சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில், வார
இறுதி நாட்களான, வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில், விலை சற்று
உயர்ந்து வர்த்தகமாகியது.ஏப்ரல் முதல் கடந்த வாரம் வரை, 20
சதவீதத்துக்கும் மேல், எண்ணெய் விலை சரிந்துள்ளதால், கச்சா
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பல சுத்திகரிப்பு எண்ணெய்
நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், விலை சரிவை
கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அனைத்து எண்ணெய் உற்பத்தி
நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.‘ஒபெக்’ எனும், கச்சா எண்னெய்
உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் சந்திப்பு, அடுத்த மாதம், 12ம்
தேதி, துபாயில் நடைபெற உள்ளது.
இதில், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள
ஒப்பந்தப்படி, உறுப்பு நாடுகள், தங்களது உற்பத்தி குறைப்பு
நடவடிக்கையை சரியாக பின்பற்றி வருகின்றனவா என்பது பற்றி
ஆராயப்படும்.மேலும், விலை ஏற்றப் போக்கினை கட்டுக்குள்
கொண்டுவர, உற்பத்திக் குறைப்பை மேலும் அதிகரிக்கலாம் என்ற
கருத்தும் நிலவி வருகிறது.இதுபோன்ற காரணங்களால், இந்த கூட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சவுதி
அரேபியாவின் தினசரி எண்ணெய் உற்பத்தி, ஜூலை மாதத்தில், 9.7
மில்லியன் பேரல்கள் ஆக இருந்தது. இது அதன் உற்பத்தி இலக்கைக்
காட்டிலும் குறைவாகும்.மேலும், ஒட்டுமொத்த, ஒபெக் உறுப்பு
நாடுகளின் உற்பத்தியும், ஜூலை மாதத்தில், ஐந்து வருட குறைவில்
இருந்தது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், தற்போது
ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் தேவையில்
ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக, விலை உயராமல், கடந்த சில வாரங்களாக
சரிந்து வருகிறது. இதற்கு, அதிகரித்து வரும், அமெரிக்காவின்
உற்பத்தியும், ஒரு முக்கிய காரணமாகும்.
தங்கம் வெள்ளி
சர்வதேச
சந்தையில், கடந்த வாரம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை,
தலா, 5 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் ஆனது. மூன்று ஆண்டுகளுக்குப்
பின் ஏற்பட்ட அதிகப்படியான, வார அளவிலான, விலை உயர்வு
இதுவேயாகும்.
அமெரிக்க மத்திய வங்கி, கடந்த மாத இறுதியில், 10
ஆண்டுகளுக்குப் பின், வட்டி விகிதத்தை முதன்முறையாகக்
குறைத்தது. இதற்கு, பொருளாதார வளர்ச்சி குறைவே காரணமாகும்.
ஆசியாவைப்
பொருத்தவரை, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளும்,
இந்த ஆண்டில், வட்டி விகிதத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக,
வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் போது, அரசு கருவூலங்களில் செய்த
முதலீடுகளுக்கான ஆதாயம் குறையும். அதன்படி, பெரும்பாலான
நாடுகளில், நீண்டகால கருவூல ஆதாயங்கள் குறைந்து வருவதால்,
முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே,
இதற்கு மாற்றாக, பாதுகாப்பு கருதி, தங்கம் மீதான முதலீடு அதிகரித்து
வருகிறது.
முன்னர் குறிப்பிட்டிருந்தது போலவே, வட்டி விகிதமும்,
தங்கம் மற்றும் வெள்ளி விலையும் எதிர்மறையான போக்கினை
கொண்டதாகும்.
அதாவது, வட்டி விகிதம் குறைக்கப்படும்போது,
அமெரிக்க நாணயத்தின் மதிப்பு சரிவு காரணமாக, கமாடிட்டி பொருட்கள்
விலை உயரும்.இதன்படி, ஜூன் மாதம் முதல், தங்கம் உள்ளிட்டவற்றில், விலை ஏற்றம் காணப்படுகிறது.நடப்பு
ஆகஸ்ட் மாதத்தில், இதுவரை, ஓர் அவுன்ஸ் தங்கம், சுமார், 115 அமெரிக்க
டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓர் அவுன்ஸ்
என்பது, 31.104 கிராம் ஆகும்.
மேலும், உலகின் மிகப்பெரிய நாடுகளான
அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து வர்த்தக மோதலில் ஈடுபட்டு
வருகின்றன. இதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும் என்ற
அச்சத்தினாலும், பாதுகாப்பு கருதியும், தங்கம் மீதான முதலீடு
அதிகரித்து வருகிறது.உள்நாட்டில், ஆபரணத் தங்கத்தின் விலை,
சர்வதேச சந்தையைக் காட்டிலும் உயர்ந்து வருவதற்கு, டாலருக்கு
நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவது ஒரு
காரணமாகும்.
தற்போது, ஓர் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய
ரூபாயின் மதிப்பு, சுமார், 70 ரூபாய் என்ற நிலையில், மேலும் மதிப்பு
சரிவு ஏற்பட்டு, உள்நாட்டு சந்தையில், ஆபரணத் தங்கத்தின் விலை,
மீண்டும் உயரும் போக்கே காணப்படுகிறது.
செம்பு
இந்த
ஆண்டின் பெரும்பாலான நாட்களில், தொடர் சரிவில் வர்த்தகமாகி வந்த
செம்பு விலை, கடந்த வாரம், சற்று அதிகரித்து, வர்த்தகமாகி
முடிவுற்றது. தற்போதைய சூழலில், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய
நாடுகளுக்கு இடையே நடந்துவரும் வர்த்தக மோதல் காரணமாக, பொருளாதார
வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், தேவை குறைந்து, விலை உயர்வு
கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில்,
செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு,
அதிகப்படியான வரி விதிக்கப்படும் என்று, அமெரிக்கா
அறிவித்திருந்தது. இதன் பின் ஏற்பட்ட பேச்சுகளில், வரி
அதிகரிப்பை விலக்கிக்கொள்வதான போக்கு நிலவி வரும் சூழலில், செம்பு
விலை ஏற்றம் கண்டது.
இருப்பினும், லண்டன் பொருள் வர்த்தக
சந்தையில், செம்பு இருப்பு அதிகரித்து வருவதால் விலை ஏற்றம்
கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|