பதிவு செய்த நாள்
13 ஆக2019
00:26
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனம், ஜூலை மாதத்தில், மொத்தம், 37 ஆயிரத்து, 945 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 5 சதவீதம் அதிகம்.ஜாகுவார் பிராண்டு கார்களின் விற்பனை மட்டும், 3.6 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து, 386 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
லேண்டு ரோவர் வாகனங்களைப் பொறுத்தவரை, விற்பனை, ஜூலை மாதத்தில், 5.6 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து, 559 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இது குறித்து, தலைமை வணிக அதிகாரி, பெலிக்ஸ் பிராட்டிகம் கூறியதாவது:ஐரோப்பிய யூனியனை பொறுத்தவரை, பிற நிறுவனங்களை விட, ஜூலை மாதத்தில் நல்ல வளர்ச்சியை நாங்கள் பெற்று உள்ளோம். அமெரிக்காவிலும் இதுவரை இல்லாத வகையில், அதிகமான வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. சீனாவைப் பொருத்தவரை, கடந்த ஆண்டை விட, இம்முறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|