பதிவு செய்த நாள்
13 ஆக2019
23:25
புதுடில்லி:கத்தோலிக் சிரியன் வங்கி, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.
கத்தோலிக் சிரியன் வங்கி, கேரளாவைச் சேர்ந்த, தனியார் வங்கியாகும். இந்தியாவின் பழமையான வங்கிகளில், இதுவும் ஒன்று.இவ்வங்கி ஆரம்பிக்கப்பட்டு, 98 ஆண்டுகள் ஆகின்றன. கேரளாவில் மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இவ்வங்கி வலுவாக காலுான்றி இருக்கிறது.இந்நிலையில், நிதி திரட்டும் முயற்சியில் இந்நிறுவனம் இறங்கி உள்ளது.
இதையடுத்து, 30 கோடி ரூபாய்க்கு, புதிய பங்குகளை வெளியிட இருக்கிறது.இது தவிர, தற்போதைய பங்குதாரர்கள் கைவசம் இருக்கும், 1.98 கோடி பங்குகளையும் வெளியிட திட்டமிட்டுள்ளது.இவ்வங்கி, 2015ம் ஆண்டில், 400 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி, பங்கு வெளியீட்டுக்கான அனுமதியையும் செபியிடமிருந்து பெற்றது. இருப்பினும், ஏதோ காரணங்களால், அப்போது, பங்கு வெளியீட்டு முயற்சியிலிருந்து பின்வாங்கி விட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|