தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.29 ஆயிரத்தை தாண்டியதுதங்கம் விலை புதிய உச்சம்: ரூ.29 ஆயிரத்தை தாண்டியது ... தங்கம் விலை சவரன் ரூ.408 குறைந்தது தங்கம் விலை சவரன் ரூ.408 குறைந்தது ...
முதல் நாள் முதல் காட்சி ‘ஜியோ’ அறிவிப்பால் அலறல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
23:31

புதுடில்லி:திரையரங்குகளில், திரைப்படங்கள் வெளியாகும் அதே நாளில், வீட்டிலிருந்த படியே, ‘பிரீமியம் ஜியோ பைபர்’ இணைப்பு வைத்திருப்பவர்கள் பார்க்கலாம்’ என, முகேஷ் அம்பானி, நேற்று முன்தினம் அறிவித்தார்.இதையடுத்து, திரையரங்குகளை நடத்தும் நிறுவனங்கள், அதிர்ந்து போயுள்ளன.


‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி, நேற்று முன்தினம், மும்பையில் நடைபெற்ற ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ‘ஜியோ பைபர் பிரீமியம் வாடிக்கையாளர்கள், புதிய திரைப்படங்களை, திரையரங்குகளில் வெளியாகும் அன்றே, வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம்’ என, அறிவித்தார்.



இந்த, ‘முதல் நாள் முதல் காட்சி’ அறிவிப்பால், ‘பி.வி.ஆர்., ஐநாக்ஸ் லீஷர்’ ஆகிய நிறுவனப் பங்குகள், நேற்று சந்தை ஆரம்பித்ததும், 10 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன. காரணம், திரையரங்குகளின் எதிர்காலம் குறித்த முதலீட்டாளர்களின் அச்சமே.இந்நிலையில், நாட்டில், 800 திரையரங்குகளை நடத்தி வரும், பி.வி.ஆர்., நிறுவனம், ‘திரையரங்கில் பார்ப்பது; வீட்டில் பார்ப்பது இரண்டும் வெவ்வேறு அனுபவங்களாகும்.


இரண்டுக்கும் அதற்கான இடங்கள் இருக்கின்றன.‘பல ஆண்டுகளாக இரண்டும் தனித்தனியே நடை போட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும்’ என, தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் படத்தை வெளியிடும் முறையைத் தான், வெளிநாடுகள் பலவும் பின்பற்றுகின்றன. இதன் மூலமாகவே, துறையின் வலுவான நிதித் தன்மை உறுதி செய்யப்பட்டு வருகிறது.



இருப்பினும், ‘திரைப்படத்தை எந்த தளத்தில் வெளியிட வேண்டும் என்பது, தயாரிப்பாளர் கையில் தான் உள்ளது’ என, ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது.ஐநாக்ஸ் நிறுவனம், 600 திரையரங்கு களுக்கு மேல் நிர்வகித்து வருகிறது. இதற்கிடையே, ஜியோ பைபர் வருகையால், ’டைரக்ட் டு ஹோம்’ எனும் டி.டி.எச்., சேவை பிரிவும் மிகவும் பாதிப்படையலாம் என, ’பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.ஆக, ஜியோ பைபர் வரும்போதே, சலசலப்புடன் வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)