பதிவு செய்த நாள்
14 ஆக2019
23:30
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, உபரி நிதியாக எவ்வளவு இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்பது
தொடர்பான அறிக்கையை, பிமல் ஜலான் கமிட்டி, இறுதி செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியில், உபரி நிதியாக எவ்வளவு இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், பிமல் ஜலான் தலைமையில், ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
ரூ.9 லட்சம் கோடி
இந்த கமிட்டி, தன் அறிக்கையை இறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆறு பேரை உறுப்பினர்களாகக் கொண்ட, பிமல் ஜலான் கமிட்டி, கடந்த ஆண்டு, டிசம்பர், 26ல், அமைக்கப்பட்டது.பிற நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் உபரி நிதியோடு ஒப்பிட்டு, இந்திய ரிசர்வ் வங்கி, உபரி நிதியாக, எவ்வளவு இருப்பு கொள்ளலாம் என்பது குறித்தும், அதிக இருப்பை மத்திய அரசுக்கு வழங்குவது குறித்தும் ஆராய, இந்த கமிட்டி அமைக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கி வசம், தற்போது உபரி நிதியாக, 9 லட்சம் கோடி ரூபாய் உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பிமல் ஜலான் கமிட்டி, தன் அறிக்கையை இறுதி செய்து விட்டதாக தெரிகிறது.
அறிக்கை ஏற்கனவே கிட்டத்தட்ட இறுதியாகி இருந்த நிலையில், கமிட்டி உறுப்பினராக இருந்த, பொருளாதார விவகாரத் துறை செயலராக இருந்த, சுபாஷ் சந்திர கார்க், மின்சாரத் துறைக்கு மாற்றப்பட்டதால், கமிட்டிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இதன் பிறகு, அந்த இடம், நிதித் துறை செயலர், ராஜிவ் குமாரால் நிரப்பப்பட்டதும், அறிக்கை இறுதி செய்யப்பட்டுஉள்ளது.இடைவெளிஇதற்கு மேல் கமிட்டி கூடப்போவது இல்லை என்றும், இன்னும் இரண்டொரு நாட்களில் அறிக்கை, ரிசர்வ் வங்கி கவர்னரிடம் வழங்கப்படும் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசுக்கு, ரிசர்வ் வங்கி எவ்வளவு நிதி வழங்கும் என்பது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மூன்று முதல், ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், உபரி நிதியானது, மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்று மட்டும் இப்போது என்னால் சொல்ல முடியும்.ரிசர்வ் வங்கி வழங்கும் உபரி நிதியால், மத்திய அரசு தாராளமாக நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|