பதிவு செய்த நாள்
15 ஆக2019
23:57
சென்னை:‘‘ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான சேவை கட்டணம் இம்மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும்,’’ என, பேங்க் ஆப் பரோடா வங்கியின், சென்னை மண்டல பொது மேலாளர், ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் குறைகளை கேட்டறியும் கூட்டம், சென்னையில் உள்ள, பேங்க் ஆப் பரோடா வங்கியின் மண்டல அலுவலகத்தில் நடந்தபோது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர் குறைகளை கேட்டறிந்த பின், பொது மேலாளர், ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிவதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் சில்லரை வணிகம் என, நான்கு பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், 250 பேர் பங்கேற்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர், ‘கடன் பெறும் நடைமுறைகள், முன் போல எளிமையாக இல்லை; மிகவும் கடினமாக இருக்கிறது; அதை எளிமைப்படுத்த வேண்டும்’ என, தெரிவித்தனர். வங்கிகள் இணைப்புக்கு பின், மொத்த வாராக் கடனின் அளவு, 6.24 சதவீதமாகவும், நிகர வாராக் கடனின் அளவு, 3 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை குறைக்க, ஒரே தவணையில் கடனை திரும்பச் செலுத்தும் முகாம் நடத்தி, கடன் வசூலிக்கப்படுகிறது.
அருகருகே உள்ள வங்கி கிளைகள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான சேவை கட்டணத்தை ரத்து செய்ய, இம்மாத இறுதி வரை அவகாசம் இருக்கிறது; அதற்குள் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|