3,000 நிறுவனங்கள் 6 மாதங்களில் துவக்கம் 3,000 நிறுவனங்கள் 6 மாதங்களில் துவக்கம் ...  சுற்றுலா மேம்பாட்டு நிறுவன நிகர லாபம் சுற்றுலா மேம்பாட்டு நிறுவன நிகர லாபம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடனை வசூலிக்க பேங்க் ஆப் பரோடா முகாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2019
23:57

சென்னை:‘‘ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான சேவை கட்டணம் இம்மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும்,’’ என, பேங்க் ஆப் பரோடா வங்கியின், சென்னை மண்டல பொது மேலாளர், ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.



வாடிக்கையாளர்கள் குறைகளை கேட்டறியும் கூட்டம், சென்னையில் உள்ள, பேங்க் ஆப் பரோடா வங்கியின் மண்டல அலுவலகத்தில் நடந்தபோது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாடிக்கையாளர் குறைகளை கேட்டறிந்த பின், பொது மேலாளர், ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிவதற்கான கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் சில்லரை வணிகம் என, நான்கு பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், 250 பேர் பங்கேற்றனர்.



அவர்களில் பெரும்பாலானோர், ‘கடன் பெறும் நடைமுறைகள், முன் போல எளிமையாக இல்லை; மிகவும் கடினமாக இருக்கிறது; அதை எளிமைப்படுத்த வேண்டும்’ என, தெரிவித்தனர். வங்கிகள் இணைப்புக்கு பின், மொத்த வாராக் கடனின் அளவு, 6.24 சதவீதமாகவும், நிகர வாராக் கடனின் அளவு, 3 சதவீதமாகவும் உள்ளது. இவற்றை குறைக்க, ஒரே தவணையில் கடனை திரும்பச் செலுத்தும் முகாம் நடத்தி, கடன் வசூலிக்கப்படுகிறது.



அருகருகே உள்ள வங்கி கிளைகள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான சேவை கட்டணத்தை ரத்து செய்ய, இம்மாத இறுதி வரை அவகாசம் இருக்கிறது; அதற்குள் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)