பதிவு செய்த நாள்
19 ஆக2019
10:49
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 130 புள்ளிகளும், நிப்டி 37 புள்ளிகளும் உயர்வுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் காலை 10.40 மணியளவில் சென்செக்ஸ் 318.87 புள்ளிகள் உயர்ந்து 37,669.20ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 85.55 புள்ளிகள் உயர்ந்து 11,133.35ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்
அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்த நிலையில் காலை 10.45 மணியளவில் 2 காசுகள் சரிந்து ரூ.71.17ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|