பதிவு செய்த நாள்
20 ஆக2019
06:52
கடந்த, 2017 –18ம் நிதி ஆண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர். 9’ என்ற, ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, நீட்டிக்க வேண்டும் என, நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது.இதை, அனைத்து வணிகர்களும் தாக்கல் செய்வது அவசியம். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், வரும், 31ல் முடிகிறது. இந்த அவகாசத்தை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது:ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு, இரண்டு கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், ‘படிவம் 9’ தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9ஏ’ மற்றும், ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ‘படிவம் 9ஏ’ மற்றும், ‘9சி’ தாக்கல் செய்வதில், அதிக சிக்கல்கள் இருக்கின்றன. இரண்டு படிவங்களையும், ஒன்றுடன் ஒன்று இணைக்கும், மென்பொருளில் கோளாறு இருக்கின்றன. இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அலுவலகத்திற்கும், கவுன்சிலுக்கும் பலமுறை தெரியப்படுத்தி உள்ளோம்.
எனவே, தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, ஆண்டு கணக்கு படிவத்தை தாக்கல் செய்ய, கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும். ஆக., 31 வரை அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|