தங்கம் விலை இன்று(ஆக.,19) சவரன் ரூ.160 சரிவுதங்கம் விலை இன்று(ஆக.,19) சவரன் ரூ.160 சரிவு ... குறைந்த வட்டியில் சிறப்பு கடன்கள்; எஸ்.பி.ஐ., விழாக்கால சலுகை குறைந்த வட்டியில் சிறப்பு கடன்கள்; எஸ்.பி.ஐ., விழாக்கால சலுகை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் அவகாசம் கோரும் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
06:52

கடந்த, 2017 –18ம் நிதி ஆண்டுக்கான, ‘ஜி.எஸ்.டி., ஆர். 9’ என்ற, ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, நீட்டிக்க வேண்டும் என, நிறுவனங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ உள்ளது.இதை, அனைத்து வணிகர்களும் தாக்கல் செய்வது அவசியம். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், வரும், 31ல் முடிகிறது. இந்த அவகாசத்தை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, நிறுவனங்கள் தரப்பில் கூறியதாவது:ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டுக்கு, இரண்டு கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், ‘படிவம் 9’ தாக்கல் செய்ய வேண்டும்.இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9ஏ’ மற்றும், ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ‘படிவம் 9ஏ’ மற்றும், ‘9சி’ தாக்கல் செய்வதில், அதிக சிக்கல்கள் இருக்கின்றன. இரண்டு படிவங்களையும், ஒன்றுடன் ஒன்று இணைக்கும், மென்பொருளில் கோளாறு இருக்கின்றன. இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அலுவலகத்திற்கும், கவுன்சிலுக்கும் பலமுறை தெரியப்படுத்தி உள்ளோம்.


எனவே, தொழில்நுட்ப கோளாறை சரி செய்து, ஆண்டு கணக்கு படிவத்தை தாக்கல் செய்ய, கூடுதலாக அவகாசம் அளிக்க வேண்டும். ஆக., 31 வரை அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)