பதிவு செய்த நாள்
22 ஆக2019
06:36
புதுடில்லி: தங்க நகைகளுக்கு, 'ஹால்மார்க்' தரச் சான்றை கட்டாயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
தற்போது, 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. நகை வியாபாரிகள், இந்த தரச் சான்றுடனும், சான்று இல்லாமலும், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப, நகைகளை விற்பனை செய்கின்றனர். இனி, இந்த மூன்று வகை நகைகளை, கட்டாயம், ஹால்மார்க் முத்திரையுடன் தான் விற்க வேண்டும் என்ற விதிமுறையை, மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. மேலும், இந்த ஒழுங்குமுறை குறித்து, ஒரு வார காலத்தில், உலக வர்த்தக அமைப்புக்கும் தெரிவிக்க இருக்கிறது.
இது குறித்து, இந்திய தர நிர்ணய கழகத்தின், டைரக்டர் ஜெனரல், சூரினா ராஜன் கூறியதாவது: ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க அரசு விரும்புகிறது. எந்தவொரு ஒழுங்குமுறை மாறுதல்களையும், உலக வர்த்தக அமைப்புக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்படி, இது குறித்து, உலக வர்த்தக அமைப்புக்கு ஒரு வார காலத்தில் தெரிவிக்கப்படும்.
இருப்பினும், இதை செயல்படுத்துவது குறித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.ஹால்மார்க்கில் முறைகேடுகள் எதுவும் நடக்காத வகையில், டிஜிட்டல்மயமாக்க, மும்பை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்துள்ளோம். இதற்கு ஓர் ஆண்டு காலமாகும். தற்போது சுமார், 800 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. நாட்டில், 40 சதவீத நகைகளே தற்போது, ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|