கார்ப்பரேட் வரியை குறைக்க சிறப்பு குழு பரிந்துரை; கூடுதல் கட்டணங்களையும் ரத்து செய்ய யோசனைகார்ப்பரேட் வரியை குறைக்க சிறப்பு குழு பரிந்துரை; கூடுதல் ... ...  ‘ஜி.எஸ்.டி., சர்வே’ துவக்கம்; மத்திய அரசுக்கு அறிக்கை ‘ஜி.எஸ்.டி., சர்வே’ துவக்கம்; மத்திய அரசுக்கு அறிக்கை ...
அனைத்து நகைகளுக்கும், ‘ஹால்மார்க்’; தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2019
06:36

புதுடில்லி: தங்க நகைகளுக்கு, 'ஹால்மார்க்' தரச் சான்றை கட்டாயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.


தற்போது, 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. நகை வியாபாரிகள், இந்த தரச் சான்றுடனும், சான்று இல்லாமலும், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப, நகைகளை விற்பனை செய்கின்றனர். இனி, இந்த மூன்று வகை நகைகளை, கட்டாயம், ஹால்மார்க் முத்திரையுடன் தான் விற்க வேண்டும் என்ற விதிமுறையை, மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. மேலும், இந்த ஒழுங்குமுறை குறித்து, ஒரு வார காலத்தில், உலக வர்த்தக அமைப்புக்கும் தெரிவிக்க இருக்கிறது.


இது குறித்து, இந்திய தர நிர்ணய கழகத்தின், டைரக்டர் ஜெனரல், சூரினா ராஜன் கூறியதாவது: ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்க அரசு விரும்புகிறது. எந்தவொரு ஒழுங்குமுறை மாறுதல்களையும், உலக வர்த்தக அமைப்புக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன்படி, இது குறித்து, உலக வர்த்தக அமைப்புக்கு ஒரு வார காலத்தில் தெரிவிக்கப்படும்.


இருப்பினும், இதை செயல்படுத்துவது குறித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.ஹால்மார்க்கில் முறைகேடுகள் எதுவும் நடக்காத வகையில், டிஜிட்டல்மயமாக்க, மும்பை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்துள்ளோம். இதற்கு ஓர் ஆண்டு காலமாகும். தற்போது சுமார், 800 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. நாட்டில், 40 சதவீத நகைகளே தற்போது, ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)