பதிவு செய்த நாள்
22 ஆக2019
23:30
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யாத வணிகர்களுக்கு, ‘இ – வே’ பில் வழங்குவதை நிறுத்தும் திட்டம், மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், மத்திய, ஜி.எஸ்.டி., விதிப்படி, இ – வே பில் வழங்குவது நிறுத்தப்படும்; இந்த நடைமுறை, ஆக., 21ல் அமலுக்கு வரும் என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் அவகாசம்மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: பல வணிகர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதில்லை. இதனால், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்தால் மட்டுமே, சரக்குகளை எடுத்து செல்ல, இ – வே பில் வழங்கப்படும் என, சில மாதங்களுக்கு முன் அறிவிப்பாணை வெளியிடப்படடது. அது, ஆக., 21 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த அவகாசம் நவ., வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், இ – வே பில் பெற முடியாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|