பதிவு செய்த நாள்
24 ஆக2019
03:08
சென்னை, ஆக. 24–பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து, அனைத்து பொதுத் துறை வங்கிகளும், அவற்றின் வங்கி கிளைகளின் அதிகாரிகளுடன், இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டம் நடத்த, மத்திய நிதி துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த ஆலோசனைகளை வங்கிகளிடமிருந்து பெற்று, மத்திய அரசுக்கு அனுப்ப, மாநில அளவில் ஒரு வங்கி ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில், அந்த ஒருங்கிணைப்பாளராக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நியமிக்கப்பட்டது.
இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர், கர்ணம் சேகர், அனைத்து பொதுத் துறை வங்கிகளின் பிரதிநிதிகளுடன், இரண்டு நாள் ஆலோசனையில் ஈடுபட்டார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பொருளாதார வளர்ச்சிக்கு, வங்கிகளின் அடிமட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளையும், மத்திய அரசு கேட்டுள்ளது. இது போன்ற ஆலோசனை கூட்டம் நடப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன் நடந்ததில்லை.
தமிழகத்தில், 5,000 வங்கி கிளை அதிகாரிகள், இரண்டு நாள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.இதில், பல்வேறு முக்கிய கருத்துகள் பரிமாறப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|