பதிவு செய்த நாள்
26 ஆக2019
18:22
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
உலக பொருளாதாரம் மந்தம் ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. பல துறைகளில் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
இதை சரி செய்யும் பொருட்டு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளியன்று அறிவித்தார். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக.,26) ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 662.97 புள்ளிகள் உயர்ந்து 37,363.95ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 170.95 புள்ளிகள் உயர்ந்து 11,000ஆக வர்த்தகமானது. தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள், வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 792.96 புள்ளிகள் உயர்ந்து 37,494.12ஆகவும், நிப்டி 228.50 புள்ளிகள் உயர்ந்து 11,057ஆக நிறைவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|