பதிவு செய்த நாள்
27 ஆக2019
03:25
புதுடில்லி : பல்வேறு துறைகளில், அன்னிய நேரடி முதலீடு சம்பந்தமான விதிமுறைகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பை, அரசு விரைவில் வெளியிடும் என தெரிகிறது.
இது குறித்து, உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:சிங்கிள் பிராண்டு வர்த்தகம், ஊடகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில், விதிமுறைகளை தளர்த்தி, புதிய கொள்கையை விரைவில் அரசு அறிவிக்க உள்ளது. மேலும், நிலக்கரி மற்றும் ஒப்பந்த தயாரிப்பு துறைகளிலும் விதிமுறைகள் தளர்த்தப்படலாம். தற்போது இருக்கும் அன்னிய முதலீட்டு கொள்கைப்படி, தயாரிப்பு துறைக்கு, 100 சதவீத முதலீட்டுக்கு அனுமதி உள்ளது.
மேலும், ஒரு தயாரிப்பாளர் தன் பொருட்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தம் மூலமான தயாரிப்பு சம்பந்தமான விதிமுறைகள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.தற்போது, செய்தித்தாள் துறையில், 26 சதவீதமும், ஊடகத் துறையில், 49 சதவீதமும் அரசின் அனுமதியுடன் முதலீடு செய்ய முடியும். இத்துறைகளில் அன்னிய முதலீட்டை மேலும் எளிதாக்குவது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|