பதிவு செய்த நாள்
27 ஆக2019
03:29
சிப்காட்’டில் தொழில் துவங்கிய நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தாத கட்டட பகுதியை, உள் குத்தகைக்கு விடும் போது, செலுத்தக் கூடிய கட்டணம், சதுர அடிக்கு, 1 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின், சிப்காட் எனும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திடம் பெறும் நிலத்தில், பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குகின்றன. அவ்வாறு வழங்கும் நிலத்திற்கு, 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும். தமிழகத்தில், காஞ்சிபுரம், துாத்துக்குடி உட்பட, பல்வேறு மாவட்டங்களில், 21 தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் தொழில் துவங்கிய நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தாத கட்டட பகுதியை, உள் குத்தகைக்கு விடுவதற்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: இதற்கு முன், உள் குத்தகை விடும் இடத்திற்கு, சதுர அடிக்கு, 7 ரூபாய் வரை இருந்தது; இப்போது, 1 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபருக்கு, உள் குத்தகைக்கு விடும் கட்டட பகுதிக்கு, சதுர அடிக்கு, 2 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|