பதிவு செய்த நாள்
27 ஆக2019
10:45
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டன. பொருளாதார மந்த நிலையில் சரி செய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, அன்னிய முதலீட்டாளர்கள் வருமானம் மீதான கூடுதல் வரியை திரும்ப பெறுவது, ஜி.எஸ்.டி.,யை எளிமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து, நேற்று பங்குச்சந்தைகள் உயர்வை கண்டன. சென்செக்ஸ், 793 புள்ளிகளும், நிப்டி, 229 புள்ளிகளும் அதிகரித்த நிலையில் இன்றும்(ஆக.,27) பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.95 புள்ளிகளும், நிப்டி 43 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. தொடர்ந்து காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 185.72 புள்ளிகள் உயர்ந்து 37,679.84ஆகவும், நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 11,131.15ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பும் ஏற்றம்
இந்திய பங்குச்சந்தைகள் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் உயர்ந்து ரூ.71.70ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|