பதிவு செய்த நாள்
01 செப்2019
23:52
இந்த நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான மாற்றங்கள், செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகின்றன.
* அசையா சொத்து வாங்குபவர்கள், செப்டம்பர் மாதம் முதல், சொத்துக்கான தொகையில், டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டிய நிலையில், கிளப் உறுப்பினர் கட்டணம், மின் கட்டணம், ‘பார்க்கிங்’ கட்டணம் போன்ற கூடுதல் செலவுகளையும் சேர்த்து கணக்கிட வேண்டும்
* சொத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், ௧ சதவீத, டி.டி.எஸ்., பொருந்தும் இதே போல, வங்கிகள், அஞ்சலகங்கள், கூட்டுறவு வங்கிகளில் இருந்து எடுக்கும் தொகை ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு டி.டி.எஸ்., பிடித்தம் பொருந்தும்
* தனிநபர்கள் மற்றும் ஹிந்து கூட்டு குடும்பங்கள், ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கும் தொகை ஆண்டுக்கு, 50 லட்சத்திற்கு மேல் இருந்தாலும், 5 சதவீத, டி.டி.ஸ்., பொருந்தும்.
* வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், இதுவரை, 50 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனைகளை வருமான வரித்துறைக்கு தெரிவித்து வந்தன. இனி, இந்த வரம்பு இல்லாமல், சிறிய அளவிலான பரிவர்த்தனை தகவல்களும், வருமான வரித்துறையிடம் பகிரப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|