பதிவு செய்த நாள்
02 செப்2019
00:10
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த வாரம் உயர்ந்து, வர்த்தகம் ஆகின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’ கடந்த ஜூன் மாதத்தில், அதன் வரலாற்று உச்சத்தை அடைந்தது. பின், அதிலிருந்து தொடர்ந்து, மூன்று மாதங்களாக சரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உச்ச நிலையில் இருந்து, 12 சதவீதம் அதாவது, 1,500 புள்ளிகள் வரை சரிந்தது. கடந்த மாதத்தில், குறைந்தபட்ச நிலையான, 10638 புள்ளிகளைஎட்டியிருந்தது.ஜூன் மாதம் முதலாகவே, பங்குச் சந்தைகள் சரிய ஆரம்பித்தன. அதற்கு முன், மார்ச், ஏப்ரல், மே, ஆகிய மூன்று மாதங்களில் நல்ல உயர்வை அடைந்திருந்தது.
இதற்கு, நடந்து முடிந்த தேர்தலின் எதிர்பார்ப்பு முக்கிய காரணமாக அமைந்தது. பின், ஜூன் மாதத்தில் சற்று சரிந்து வர்த்தகம் ஆனது. ஜூலை மாதம் வெளியான பட்ஜெட்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தியாவில் வியாபாரம் செய்வதில் புதிய கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. மேலும், அவர்களிடம், லாபத்தில் புதிய வரி விதிக்கப்பட்டது.இதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பெருமளவிலான பங்குகளை விற்று, முதலீட்டை திரும்பப் பெற்றனர்.
ஜூலை மாதம் அதிக அளவிலான விற்பனை நடைபெற்றது.ஆகஸ்ட் மாதம் ஆரம்பம் முதலாகவே, பொருளாதார சீரமைப்புக்காக, மத்திய அரசின் தலையீடு மற்றும் சலுகைகள் குறித்தான எதிர்பார்ப்புகள் நிலவின. மற்ற நாடுகள் வட்டி விகிதங்களை குறைத்து அறிவித்தன. நம் நாட்டிலும், தொடர்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. நிறுவனங்களுக்கான கடன் மற்றும் தனிநபர் கடன் எளிமையாக்கப்பட்டது.
இருப்பினும், நாட்டின் வாகன விற்பனை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கடுமையாக சரிந்தது. இது, நுகர்வோர் மத்தியில் வாங்கும் திறன் குறைவதை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.பணப்புழக்கம் குறைந்த நிலையில், அது நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளிலும் பிரதிபலித்தது. பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கைகள், எதிர்பார்த்த அளவில் இல்லாதது, பங்குச் சந்தைகளில் கடும்தாக்கத்தை ஏற்படுத்தின.
அத்துடன், யெஸ் பேங்க், அனில் அம்பானியின் நிறுவனங்கள் என, பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள், கடன் சுமை காரணமாக கடுமையாக பாதிப்படைந்தன.கடந்த வாரத்தில், மத்திய நிதியமைச்சர், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சீரமைக்கவும் சில முக்கிய சலுகைகளையும், மானியங்களையும் அறிவித்தார். இருப்பினும், இந்த நடவடிக்கைகள், சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்து வரும் வர்த்தக மோதல் காரணமாக, உலகபங்குச் சந்தைகள் சரிந்து வர்த்தகம் ஆகின.இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, நிதியமைச்சர் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் அறிவிப்பும் வெளியானது. இது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக சரிந்தது.
இந்த வாரத்தை பொறுத்தவரை, நிப்டி ரெசிஸ்டென்ஸ், 11120 மற்றும் 11200; சப்போர்ட், 11055, 10980.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|