பதிவு செய்த நாள்
03 செப்2019
23:26
புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, 9,300 கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் வழங்க, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.
ஐ.டி.பி.ஐ., வங்கியின் மூலதனத்தை அதிகரித்து, அதை லாப பாதைக்கு திருப்பும் வகையில், அவ்வங்கிக்கு கூடுதல் மூலதனமாக, 9,300 கோடி ரூபாயை வழங்க, மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவு குறித்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
ஐ.டி.பி.ஐ., வங்கி, லாபம் ஈட்டும் வகையில், அதற்கு மூலதன உதவி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 9,300 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதில், எல்.ஐ.சி., நிறுவனம், 51 சதவீத தொகையை வழங்கும். அதாவது, 4,743 கோடி ரூபாயை அந்நிறுவனம் வழங்கும். மீதி, 49 சதவீத தொகையான, 4,557 ரூபாயை, அரசு ஒரே தடவையாக வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஜனவரியில், ஐ.டி.பி.ஐ., நிறுவனத்தில், அரசு தன்னுடைய, 86 சதவீத பங்கை, 46.46 சதவீதமாக குறைத்துக்கொண்டது. அதேசமயம், எல்.ஐ.சி., நிறுவனம், அதன் பங்கை, 51 சதவீதமாக அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஐ.டி.பி.ஐ., வங்கியை, லாப பாதைக்கு திருப்ப, அரசும், எல்.ஐ.சி., நிறுவனமும், மூலதன உதவி செய்ய முன்வந்து உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|