பதிவு செய்த நாள்
03 செப்2019
23:28
புதுடில்லி:அலகாபாத் வங்கியுடனான இணைப்பு, அடுத்த ஆண்டு, மார்ச், 31ம் தேதிக்குள் முடிவடைந்துவிடும் என, இந்தியன் வங்கி எதிர்பார்க்கிறது.
கடந்த வாரம், 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து, நான்கு பெரிய வங்கிகளாக மாற்ற இருப்பது குறித்து, மத்திய அரசு அறிவித்தது. அதில், அலகாபாத் வங்கியை, இந்தியன் வங்கியுடன் இணைப்பதும் ஒன்று.இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், அலகாபாத் வங்கி இணைப்பு நிறைவேறிவிடும் என்று, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர், பத்மஜா சந்துரு கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:முதலில், இரு வங்கிகளும், அவற்றின் நிர்வாக குழுவுக்கு இணைப்பு குறித்து எடுத்துச் செல்லும். இது, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள்ளாக நடைபெறும். அடுத்த சில மாதங்களில், இரு நிர்வாக குழுவும் இணைப்புக்கான செயல்முறையை முடிக்கும்.அனேகமாக, மார்ச், 31ம் தேதிக்குள் இணைப்பு சம்பந்தமான வேலைகள் அனைத்தும் முடிந்துவிடும் என கருதுகிறேன். வங்கிகள் இணைப்பில் நாங்கள் முந்திக்கொள்வோம் என நம்புகிறோம்.
வங்கிகள் இணைப்புக்குப் பிறகு, எங்களது முன்னுரிமை, வணிக வளர்ச்சி மற்றும் லாபம் தவிர, பணியாளர் நலன் மற்றும் மேலாண்மைக்கே இருக்கும். பணி நீக்கம், கிளைகளை மூடுவது என எதுவும் இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|