பதிவு செய்த நாள்
03 செப்2019
23:30
‘‘எல்.ஐ.சி., நிறுவன, தென் மண்டலத்தின், 2019 – 20ம் நிதி ஆண்டு இலக்காக, 12 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது,’’ என, அதன் மேலாளர் தெரிவித்தார்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., 64வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதே போல, சென்னையில், உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் கட்டி, 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இது தொடர்பாக, எல்.ஐ.சி.,யின் தென் மண்டல மேலாளர், கே.கதிரேசன் அளித்த பேட்டி:
எல்.ஐ.சி., நிறுவனம் பொதுவுடமையாக்கப்பட்டு, 63 ஆண்டுகள் முடிந்து, 64வது ஆண்டில் நுழைகிறது. லாபகரமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில், இதுவரை, 29 கோடி ‘இன்சூரன்ஸ் பாலிசிகள்’ பெறப்பட்டுள்ளன. கடந்த, 2018 –19ம் நிதி ஆண்டில் மட்டும், 1.63 லட்சம் கோடி ரூபாய், காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் மட்டும், 2.8 கோடி காப்பீடுதாரர்கள் உள்ளனர்.
நடப்பு நிதி ஆண்டிற்கு, 12 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் மதிப்பில், காப்பீடு பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 22 லட்சம், இன்சூரன்ஸ் பாலிசியும், இதன் வாயிலாக, 6,025 கோடி ரூபாய் காப்பீடு தொகை பெறவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல, 43 லட்சம் ஓய்வூதிய இன்சூரன்ஸ் பாலிசியும், இதன் வாயிலாக, 6,800 கோடி ரூபாய் காப்பீடு தொகை பெறவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|