பதிவு செய்த நாள்
04 செப்2019
11:03
சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக இன்று(செப்., 4) சவரன் ரூ.30 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,741க்கும், சவரன் ரூ.29,928 க்கும் விற்பனையானது.
உலகளவில் அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், பொருளாதார மந்த நிலையாலும், அமெரிக்க - சீனா இடையே நிலவும் வர்த்தக போராலும், ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி காரணமாகவும் பிற துறைகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதேசமயம் தங்கத்தின் மீதான முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இன்று(செப்.,4) உச்சமாக சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று, காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,765க்கும், சவரன் ரூ.288 உயர்ந்து ரூ.30,120க்கும், 24 காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.39,220க்கும் விற்பனையானது. மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,741க்கும், சவரன் ரூ.29,928 க்கும் விற்பனையானது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.60 காசுகள் உயர்ந்து ரூ.55.20க்கு விற்பனையானது. மாலையில் சற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.54.80க்கு விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|