பதிவு செய்த நாள்
04 செப்2019
17:13
சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இது தான் சரியான நேரம். என்ன காரணம் என கேட்பவர்களுக்கு இதோ பதில். சிங்கப்பூருக்கு 3 நாட்கள் மெகா சலுகை விலையில் டிக்கெட் விற்பனையை துவக்கி உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டணத்தை குறைத்து வழங்க திட்டமிட்டுள்ளது.
செப்.,4, 5 மற்றும் 6 ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் இந்த சலுகை விலை டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. சலுகை விலை டிக்கெட்டிற்கான ஆரம்ப விலை ரூ.5999 ஆகும். இந்த சலுகை கட்டணத்தை 2020 ம் ஆண்டு மார்ச் 28 வரை பயணிக்க பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த 7 மாதங்களுக்கு சலுகை கட்டண விலையில் சிங்கப்பூருக்கு பயணிக்கலாம்.
சலுகை கட்டணம் குறித்த முக்கிய விபரங்கள் :
* சிங்கப்பூர் மற்றும் 6 இந்திய நகரங்களான திருச்சி, மதுரை, சென்னை, கொச்சி, கோவை, பெங்களூரு இடையேயான அனைத்து விமானங்களுக்கும் இந்த சலுகை கட்டணம் உண்டு.
* 2019 ம் ஆண்டு செப்.,04 துவங்கி, செப்.,06 வரை மட்டுமே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும்.
* 2019, செப்.,4 முதல் 2020, மார்ச் 28 வரையிலான பயணத்திற்கு மட்டும் இந்த 3 நாட்கள் சலுகை கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கட்டண விபரம் :
திருச்சி - சிங்கப்பூர் : ரூ.5999
மதுரை - சிங்கப்பூர் : ரூ.5999
சென்னை - சிங்கப்பூர் : ரூ.5999
கொச்சி - சிங்கப்பூர் : ரூ.5999
கோவை - சிங்கப்பூர் : ரூ.6999
பெங்களூரு - சிங்கப்பூர் : ரூ.7999
சிங்கப்பூர் - திருச்சி : 125 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - மதுரை : 125 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - சென்னை : 149 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - கொச்சி : 149 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - கோவை : 169 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - பெங்களூரு : 179 சிங்கப்பூர் டாலர்
இந்த கட்டண விபரங்கள் அனைத்தும் வரிகளுடன் சேர்க்கப்பட்டது. கட்டண விலையில் சிங்கப்பூருக்கு பறக்கும் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஏன் பயணிக்கனும்?
ஒவ்வொரு ஆண்டும் 4.3 மில்லியன் பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் பயணம் செய்கிறார்கள். 140 நகரங்களை இணைத்து, அனைவருக்கும் ஏற்ற கட்டணத்தில் விமான சேவை வழங்கி வருகிறது. இந்தியாவில் மெட்ரோ அல்லாத நகரங்களையும், சர்வதேச அண்டை நாடுகளுடன், குறிப்பாக வளைகுடா நாடுகளை இணைக்கும் விமான சேவையை ஏர்இந்தியா வழங்கி வருகிறது.
பயணிகளுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தாத வகையில் மிகக் குறைந்த விலையில் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி உள்ளிட்டவற்றுடன் குறைந்த விலையில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்றே கூறலாம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சமீபத்தில் இருக்கைகள், கேபினின் சூழல் ஆகியவற்றை மாற்றி அமைத்துள்ளது.
மிக கனிவான, பல மொழி பேசும் ஊழியர்கள், நேரத்திற்கு அதுவும் வேகமாக பயணிக்கும் இந்தியாவின் முன்னணி பட்ஜெட்டிற்குள் அடங்கும் விமான சேவையை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|