ரூ.30 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை சற்று குறைந்ததுரூ.30 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை சற்று குறைந்தது ...  சேவைகள் துறை வளர்ச்சியில் தொய்வு ஓராண்டில் அழுத்தங்கள் குறையும் என நம்பிக்கை சேவைகள் துறை வளர்ச்சியில் தொய்வு ஓராண்டில் அழுத்தங்கள் குறையும் என ... ...
சிங்கப்பூர் செல்லும் சர்வதேச விமான கட்டணம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2019
17:13

சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இது தான் சரியான நேரம். என்ன காரணம் என கேட்பவர்களுக்கு இதோ பதில். சிங்கப்பூருக்கு 3 நாட்கள் மெகா சலுகை விலையில் டிக்கெட் விற்பனையை துவக்கி உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கட்டணத்தை குறைத்து வழங்க திட்டமிட்டுள்ளது.

செப்.,4, 5 மற்றும் 6 ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் இந்த சலுகை விலை டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. சலுகை விலை டிக்கெட்டிற்கான ஆரம்ப விலை ரூ.5999 ஆகும். இந்த சலுகை கட்டணத்தை 2020 ம் ஆண்டு மார்ச் 28 வரை பயணிக்க பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த 7 மாதங்களுக்கு சலுகை கட்டண விலையில் சிங்கப்பூருக்கு பயணிக்கலாம்.

சலுகை கட்டணம் குறித்த முக்கிய விபரங்கள் :

* சிங்கப்பூர் மற்றும் 6 இந்திய நகரங்களான திருச்சி, மதுரை, சென்னை, கொச்சி, கோவை, பெங்களூரு இடையேயான அனைத்து விமானங்களுக்கும் இந்த சலுகை கட்டணம் உண்டு.

* 2019 ம் ஆண்டு செப்.,04 துவங்கி, செப்.,06 வரை மட்டுமே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும்.

* 2019, செப்.,4 முதல் 2020, மார்ச் 28 வரையிலான பயணத்திற்கு மட்டும் இந்த 3 நாட்கள் சலுகை கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கட்டண விபரம் :
திருச்சி - சிங்கப்பூர் : ரூ.5999
மதுரை - சிங்கப்பூர் : ரூ.5999
சென்னை - சிங்கப்பூர் : ரூ.5999
கொச்சி - சிங்கப்பூர் : ரூ.5999
கோவை - சிங்கப்பூர் : ரூ.6999
பெங்களூரு - சிங்கப்பூர் : ரூ.7999

சிங்கப்பூர் - திருச்சி : 125 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - மதுரை : 125 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - சென்னை : 149 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - கொச்சி : 149 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - கோவை : 169 சிங்கப்பூர் டாலர்
சிங்கப்பூர் - பெங்களூரு : 179 சிங்கப்பூர் டாலர்

இந்த கட்டண விபரங்கள் அனைத்தும் வரிகளுடன் சேர்க்கப்பட்டது. கட்டண விலையில் சிங்கப்பூருக்கு பறக்கும் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஏன் பயணிக்கனும்?
ஒவ்வொரு ஆண்டும் 4.3 மில்லியன் பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் பயணம் செய்கிறார்கள். 140 நகரங்களை இணைத்து, அனைவருக்கும் ஏற்ற கட்டணத்தில் விமான சேவை வழங்கி வருகிறது. இந்தியாவில் மெட்ரோ அல்லாத நகரங்களையும், சர்வதேச அண்டை நாடுகளுடன், குறிப்பாக வளைகுடா நாடுகளை இணைக்கும் விமான சேவையை ஏர்இந்தியா வழங்கி வருகிறது.

பயணிகளுக்கு எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தாத வகையில் மிகக் குறைந்த விலையில் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு உணவு, சிற்றுண்டி உள்ளிட்டவற்றுடன் குறைந்த விலையில் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்றே கூறலாம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சமீபத்தில் இருக்கைகள், கேபினின் சூழல் ஆகியவற்றை மாற்றி அமைத்துள்ளது.

மிக கனிவான, பல மொழி பேசும் ஊழியர்கள், நேரத்திற்கு அதுவும் வேகமாக பயணிக்கும் இந்தியாவின் முன்னணி பட்ஜெட்டிற்குள் அடங்கும் விமான சேவையை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கி வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)