பதிவு செய்த நாள்
04 செப்2019
23:22
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் தயாரிப்பை, இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானாவில் உள்ள, குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும், இரண்டு நாட்கள் தயாரிப்பை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இந்த இரு ஆலைகளிலும், 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்படும் என மாருதி அறிவித்துள்ளது.விற்பனையில் சரிவு ஏற்பட்டு வருவதால், இம்முடிவை, மாருதி எடுத்துள்ளது.
வாகன விற்பனை சரிவை கண்டதால், ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனம், 33.99 சதவீதம் அளவுக்கு தயாரிப்பை குறைத்துக் கொண்டது.ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனம், மொத்தம், 1 லட்சத்து, 11 ஆயிரத்து, 370 வாகனங்களை தயாரித்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், இதே மாதத்தில்,1 லட்சத்து, 68 ஆயிரத்து, 725 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்தில், 25.15 சதவீதம் அளவுக்கு தயாரிப்பை குறைத்துக்கொண்டது.ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை, 33 சதவீதம் குறைந்துள்ளது. இம்மாதத்தில், மொத்தம், 1 லட்சத்து, 6 ஆயிரத்து, 413 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இதனையடுத்து, தயாரிப்பு குறைப்பு நடவடிக்கையை, மாருதி சுசூகி மேற்கொண்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|