பதிவு செய்த நாள்
04 செப்2019
23:25
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், சிறிய சரிவை சந்தித்துஉள்ளது.
புதிய வணிக ஒப்பந்தங்கள், உற்பத்தி மற்றும் வேலை உருவாக்கம் ஆகிய வற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், சிறிது சரிவு கண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சாதகமான நிலை‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.எச்.எஸ்., மார்க்கிட் குறியீடு, ஆகஸ்ட் மாதத்தில், 52.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இதுவே, ஜூலை மாதத்தில், 53.8 புள்ளிகளாக இருந்தது.எனினும், 50க்கும் மேற்பட்ட புள்ளிகள் வளர்ச்சியை குறிக்கும் என்பதால், ஓரளவு சாதகமான நிலையிலேயே சேவைகள் துறை இருக்கிறது. 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால், அது சரிவை குறிக்கும்.
ஆகஸ்ட் மாத சேவைகள் துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்து, ஐ.எச்.எஸ்., மார்க்கிட்டின் முதன்மை பொருளாதார நிபுணர், பாலியானாடி லிமா கூறியுள்ளதாவது: இந்தியாவின் சேவைகள் துறைக்கான பலவீனமான, பி.எம்.ஐ., குறியீடுகள், தயாரிப்பு துறையின் போக்குடன் பொருந்தி போகிறது. இது, 2019 – -20 நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தயாரிப்பு துறை உற்பத்தி, சேவைகள் துறை உற்பத்தி ஆகிய இரண்டையும் சேர்த்த, ’ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா காம்போசிட் பி.எம்.ஐ.,’ ஜூலை மாதத்தில், 53.9 புள்ளிகளாக இருந்தது, ஆகஸ்டில், 52.6 ஆக குறைந்துள்ளது.எதிர்பார்ப்புஜூலை முதல், புதிய ஆர்டர்களின் வளர்ச்சி மிதமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில், தனியார் துறை வேலைகள் மேலும் உயர்ந்தன. இருப்பினும், விரிவாக்கத்தின் வேகம் மெதுவாகவே இருக்கிறது.
நிறுவனங்கள், தங்கள் விலையை அதிகரித்ததால் தேவை குறையும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 15 மாதங்களில் இல்லாத வகையில் சரிவை சந்தித்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும்.
2018, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 52.5 புள்ளிகளாக இருந்தது.கடந்த ஜூலை மாதம் முதலாகவே, பெரும்பாலான அளவீட்டுக்கான குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்த தால், உற்பத்தி வளர்ச்சி, தன் வேகத்தை இழந்துள்ளது.இருப்பினும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால், பொருளாதார மந்தநிலை மற்றும் பணப்புழக்க பிரச்னைகள் தரும் அழுத்தங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கி, ஏற்கனவே நடப்பு ஆண்டில் மட்டும், வட்டி விகிதத்தை, 1.10 சதவீதம் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு துறையை சேர்ந்தவர்களும், சேவைகள் துறையை சேர்ந்தவர்களும், அரசின் கொள்கைமுடிவுகளால், அடுத்த 12 மாதங்களில் வளர்ச்சிஏற்படும் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.-–பாலியானா டி லிமாமுதன்மை பொருளாதார நிபுணர்,ஐ.எச்.எஸ்., மார்க்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|