பதிவு செய்த நாள்
06 செப்2019
01:10
புதுடில்லி:‘அலிபாபா’ குழுமம், இந்தியாவில், முழுவதும் அதற்கு சொந்தமான மின்னணு வர்த்தகத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.சீனாவைச் சேர்ந்த, அலிபாபா குழுமத்தின் துணை நிறுவனமான, ’யு.சி., வெப்’ நிறுவனத்தின் மூலம், இந்தியாவில் மின்னணு வர்த்தகத்தில் முழுமையாக இறங்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்னணு வர்த்தகம் சார்ந்து, புதுமையான வணிக மாதிரியை துவக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த ஆண்டு இறுதியில், புதிய மின்னணு வர்த்தகத்தை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.அலிபாபா குழுமத்துக்கு, ’ஸ்நாப்டீல்’ நிறுவனத்தில், 3 சதவீத பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அலிபாபா குழுமத்தின் துணை நிறுவனமான, ’யு.சி., வெப்’ நிறுவனத்தின், ’யு.சி., பிரவுசர்’ இந்தியாவில், 2009ம் ஆண்டிலிருந்து இருக்கிறது.இந்த பிரவுசரை, சீனா தவிர்த்து, உலக நாடுகளில், 110 கோடி பேர் பதிவு செய்திருப்பதாகவும், அதில் பாதி பேர், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 13 கோடி பேர் முழுமையாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.’யு.சி., வெப்’ நிறுவனம், விரைவில், திரைப்பட நுழைவுச் சீட்டுகளை, ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யவும் திட்டமிட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|