புதுமையான மாதிரியுடன் வருகிறது, அலிபாபாபுதுமையான மாதிரியுடன் வருகிறது, அலிபாபா ...  அன்னிய நேரடி முதலீடு 28 சதவீதம் அதிகரிப்பு அன்னிய நேரடி முதலீடு 28 சதவீதம் அதிகரிப்பு ...
எல்.ஐ.சி., சொத்து மதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
02:36

புதுடில்லி:நாட்டின், மிகப் பெரிய பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி.,யின் சொத்து மதிப்பு, 31.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
எல்.ஐ.சி.,யின் சந்தை பங்களிப்பானது, ஜூலை மாத நிலவரப்படி, 73.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த, 1956ம் ஆண்டு, 5 கோடி ரூபாய் ஆரம்ப முதலீடுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு, 31 லட்சத்து, 11 ஆயிரம் கோடி ரூபாயாக, விஸ்வரூபம்எடுத்துள்ளது.இதில், ஆயுள் காப்பீட்டு மூலமான நிதி மட்டுமே, 28 லட்சத்து, 28 ஆயிரம் கோடி ரூபாய்.பாலிசிகள்இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, இதற்கு, 148 அலுவலகங்கள் இருந்தன.தற்போது, 4,851 அலுவலகங்கள் நாடெங்கும் உள்ளன. ஊழியர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்நிறுவனத்துக்கு, 11.79 லட்சம் முகவர்கள் உள்ளனர்; 29.09 கோடிக்கும் மேற்பட்ட பாலிசிகள் கொண்ட நிறுவனமாகவும் இருக்கிறது,பங்களிப்புகடந்த, 2018 – -19ல், முதலாண்டு பிரீமியம் மூலமான வணிகம், 5.68 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.நடப்பாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, முதல் ஆண்டு பிரீமியம் தொகை, 1 லட்சத்து, 42 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. சந்தை பங்களிப்பில் இது, 66.24 சதவீதம்.பாலிசி எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, இதன் சந்தை பங்களிப்பு, 74.71 சதவீதம். நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, புதிய பாலிசிகளின் எண்ணிக்கை மட்டும், 2.1 கோடி.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)