பதிவு செய்த நாள்
06 செப்2019
02:36
புதுடில்லி:நாட்டின், மிகப் பெரிய பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி.,யின் சொத்து மதிப்பு, 31.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
எல்.ஐ.சி.,யின் சந்தை பங்களிப்பானது, ஜூலை மாத நிலவரப்படி, 73.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த, 1956ம் ஆண்டு, 5 கோடி ரூபாய் ஆரம்ப முதலீடுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு, 31 லட்சத்து, 11 ஆயிரம் கோடி ரூபாயாக, விஸ்வரூபம்எடுத்துள்ளது.இதில், ஆயுள் காப்பீட்டு மூலமான நிதி மட்டுமே, 28 லட்சத்து, 28 ஆயிரம் கோடி ரூபாய்.பாலிசிகள்இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது, இதற்கு, 148 அலுவலகங்கள் இருந்தன.தற்போது, 4,851 அலுவலகங்கள் நாடெங்கும் உள்ளன. ஊழியர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்நிறுவனத்துக்கு, 11.79 லட்சம் முகவர்கள் உள்ளனர்; 29.09 கோடிக்கும் மேற்பட்ட பாலிசிகள் கொண்ட நிறுவனமாகவும் இருக்கிறது,பங்களிப்புகடந்த, 2018 – -19ல், முதலாண்டு பிரீமியம் மூலமான வணிகம், 5.68 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.நடப்பாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, முதல் ஆண்டு பிரீமியம் தொகை, 1 லட்சத்து, 42 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. சந்தை பங்களிப்பில் இது, 66.24 சதவீதம்.பாலிசி எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, இதன் சந்தை பங்களிப்பு, 74.71 சதவீதம். நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, புதிய பாலிசிகளின் எண்ணிக்கை மட்டும், 2.1 கோடி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|