பதிவு செய்த நாள்
06 செப்2019
23:35
புதுடில்லி:வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியை குறைக்கும் வகையில், வாகன மின்னணு பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட முக்கிய பாகங்கள் ஆகியவற்றை தயாரிக்க முன்வர வேண்டும் என, ‘மாருதி சுசூகி’ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, கெனிச்சி அயுக்கவா மேலும் கூறியதாவது:வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, நான் ஒரு சவால் மற்றும் அழைப்பை விடுக்கிறேன்.
மாருதி சுசூகி நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன், 90 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரானவை. இருப்பினும், முக்கியமான ஒரு சில பாகங்கள் மற்றும் மின்னணு பொருட்களைப் பொறுத்தவரை, இன்னும் இறக்குமதி தான் செய்ய வேண்டி உள்ளது.
ஆனால், நாம் விரும்புவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதை தான். யாராவது இத்தகைய பாகங்களை நல்ல தரத்துடனும் நம்பகத்தன்மையுடனும் உருவாக்க முடிந்தால், அது, மாருதி சுசூகி நிறுவனத்துக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த வாகன துறைக்கே உதவும். இதற்கு உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|