பதிவு செய்த நாள்
06 செப்2019
23:38
புதுடில்லி:தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் தோன்றும், விளம்பர துாதர்களுக்கு, கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்கள் மற்றும் விளம்பர துாதர்களுக்கு, கடுமையான அபராதமும், சிறை தண்டனையும் வழங்க வகை செய்ய வேண்டும் என, இந்த கூட்டமைப்பு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வானுக்கு எழுத்து மூலமான கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:ஒரு தயாரிப்புக்கு, ஒருவர் ஒப்புதல் அளிப்பது என்பது, முற்றிலும் வணிக பரிவர்த்தனை தான். எனவே, பிரபலங்கள் மற்றும் விளம்பர துாதர்கள், அந்த பொருளுக்கான விற்பனை முகவராக செயல்படுகிறார் என்றே கருதப்பட வேண்டும்.
எனவே, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களின், விளம்பர துாதர்கள் மற்றும் பிரபலங்களுக்கு, கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க வகை செய்ய வேண்டும்.இவ்வாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|