பதிவு செய்த நாள்
06 செப்2019
23:45
சென்னை:மொபைல் வாடிக்கையாளர்களுக்கான, எட்டு சிறப்பு கட்டண திட்டங்களை, செப்., 1ம் தேதியிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாக, 5ம் தேதி திடீரென, பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.
இந்நிறுவனம், அவ்வபோது சிறப்பு கட்டண திட்டங்களை அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில், 39; 44; 65; 69; 84; 122; 187 மற்றும் 192 ரூபாய் மதிப்பிலான, எட்டு சிறப்பு கட்டண திட்டங்களை திரும்ப பெறுவதாக, பி.எஸ்.என்.எல்., திடீரென குறுந்தகவல் மூலம் அறிவித்துள்ளது.அதில், ‘மேற்குறிப்பிட்ட எட்டு சிறப்பு கட்டண திட்டங்களும், 186 ரூபாய் மதிப்பிலான, ‘பிரீபெய்டு’ திட்டமும், செப்., 1ம் தேதியிலிருந்து திரும்ப பெறப்படுகிறது’ என, குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே பயன்படுத்தி வரும் திட்டங்களை, திடீரென திரும்ப பெறுவதாக, அறிவித்துள்ளனர். அந்த வாடிக்கை யாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இல்லை. சேவை திடீரென துண்டிக்கப்பட்டால் என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.‘இந்த அறிவிப்பு குறித்து எங்களுக்கு தெரியாது’ என்கின்றனர், இங்குள்ள, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|