சிறப்பு கட்டண திட்டங்கள் பி.எஸ்.என்.எல்., திடீர் நிறுத்தம் சிறப்பு கட்டண திட்டங்கள் பி.எஸ்.என்.எல்., திடீர் நிறுத்தம் ...  சென்னை துறைமுகத்துக்கு மவுசு! சென்னை துறைமுகத்துக்கு மவுசு! ...
ஏற்றுமதியை அதிகரிக்க அதிரடி நடவடிக்கை:வரி குறைப்பிலிருந்து காப்பீட்டு அதிகரிப்பு வரை சலுகைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
23:51

புதுடில்லி:ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளில், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து, அரசின் அறிவிப்பு விரைவில் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



நிதித்துறை மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகங்கள், இது குறித்து பலகட்ட பேச்சுகளை நடத்தியுள்ளதாக, அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றன.


வரி சலுகை


ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும், வரிச் சலுகைகளை நீக்குவதற்கான காலக்கெடு அதிகரிக்கப்படும் என தெரிகிறது.



இது குறித்து, அரசு தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த, 2016- – 17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையின் போது, புதிய பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கான வருமான வரிச் சலுகைகள், 2020 மார்ச், 31ம் தேதிக்கு முன், செயல்பாட்டை துவங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இப்போது, இந்த காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.



அதிக உழைப்பை கோரும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையை பொறுத்தவரை, வண்ண கற்கள் மற்றும் மெருகேற்றபட்ட வைரங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும், 7.5 சதவீத இறக்குமதி வரி குறைக்கப்படும் என தெரிகிறது.


உத்தரவாதம்



ஏற்றுமதி கடனுக்காக, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் வழங்கும் காப்பீட்டு தொகையை, 60 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இது, வங்கிகள் அதிக ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கும் வகையிலும், இறக்குமதியை குறைக்கும் வகையிலும், சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.


தடையற்ற வர்த்தக உடன்படிக்கை நாடுகளின் வழியாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மட்டுப்படுத்தும் வகையில், விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை விரைவாக கையாள, ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.



இந்திய வணிக ஏற்றுமதி திட்டத்தின் பலன்களை, பாசுமதி அல்லாத அரிசி, ஜவுளி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் கோரி வருகின்றனர். இவையும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.பெரிய மருந்து நிறுவனங்களுக்கான வட்டி குறைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுஉள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.37 சதவீதம் சரிவு கண்டு, 7.73 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும், 2.25 சதவீதம் வளர்ச்சி கண்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.



உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, தேவைகள் குறைந்து வருகின்றன. இதன் காரணமாக, ஏற்றுமதி கடினமான காலகட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ஏற்றுமதி யாளர்களுக்கான அரசின் ஆதரவு நடவடிக்கைகள், அவர்களது போட்டித் தன்மையை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.


-அஜய் சஹாய், டைரக்டர் ஜெனரல்,


இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)