பதிவு செய்த நாள்
13 செப்2019
23:30
புதுடில்லி:வாகன விற்பனை குறித்த விபரங்களை, பதிவாகும் வாகனங்கள் அடிப்படையில் வழங்க வேண்டும் என, இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு, வாகன முகவர்கள் கூட்டமைப்பான, எப்.ஏ.டி.ஏ., கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து, வாகன முகவர்கள் கூட்டமைப்பின் தலைவர், ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே, இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர், ராஜன் வதேராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:சில்லரை விற்பனை குறித்த விபரங்களை வெளியிடுவது, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை தான். இந்த நடைமுறை, நாட்டின் வாகன துறையின் முன்னேற்றத்துக்கு உதவும்.
சில்லரை விற்பனை தகவல்களை வழங்குவதன் மூலம், விற்பனையில் ஏற்படும் மந்தநிலையை கணிப்பது எளிதாக இருக்கும் என, முகவர்களும், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களும் கருதுகின்றனர்.இது, சரக்கு நிர்வாகத்துக்கு உதவுவதாக இருக்கும். எனவே, தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் வாகனங்கள் அடிப்படையிலான தரவுகளுக்குப் பதிலாக, வாகனங்களின் பதிவின் அடிப்படையிலான தரவுகளை கொண்டு, வாகன விற்பனை குறித்து அறிவிக்க வேண்டும்.
வாகன பதிவுகள் குறித்த தகவல்கள், சாலை அமைச்சகத்தின், ‘வாகன்’ இணையதளத்தில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி விற்பனை தரவுகளை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|