பதிவு செய்த நாள்
14 செப்2019
23:37
சென்னை:இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்காக, ‘இன்ட் அட்வான்டேஜ்’ எனும், புதிய வெகுமதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி சார்பில், வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி வழங்கும், ‘இன்ட் அட்வான்டேஜ்’ திட்டம், சென்னையில் துவங்கப்பட்டது.இந்த திட்டத்தை, வங்கியின் செயல் இயக்குனர், எம்.கே.பட்டாச்சார்யா துவக்கி வைத்தார்.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள், டெபிட் கார்டு, ஆன்லைன் வங்கி, மொபைல் வங்கி சேவை ஆகியவற்றை பயன்படுத்தும் போது, அதற்காக வங்கி சார்பில் வெகுமதி புள்ளிகள் வழங்கப்படும்.குறிப்பிட்ட புள்ளிகளுக்கான பண மதிப்பில், பொருட்கள், பயணச் சீட்டுகள், உட்பட, பல்வேறு தேவைகளுக்காக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தி பயன் அடையலாம்.
வங்கி துறை போட்டிகள் நிறைந்ததாக மாறியதால், இதர வங்கிகளுடன் போட்டியிடு வதற் காக, இது போன்ற சேவைகள் துவங்கப்பட்டுள்ளன.இந்தியன் வங்கியில், ஆன்லைன் சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஜூன் மாதத்தில், 28 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வெகுமதி சேவை, புதிதாக இணைய உள்ள வங்கி வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|