பதிவு செய்த நாள்
16 செப்2019
00:00
அதிக பாலிசி பலன்களை அளிப்பதாக தொலைபேசி மூலம் ஆசை காட்டி ஏமாற்றும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்சரிக்கை செய்துள்ளது.
காப்பீடு ஒழுங்குமுறை அமைப்பு அல்லது தொடர்புடைய மற்ற கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்று சொல்லி ஒரு சிலர் பொதுமக்களை தொடர்பு கொண்டு, அதிக பாலிசி பலன் அளிக்கும் சலுகை பற்றி கூறி வருவதாக புகார்கள் வருகின்றன என, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இந்த அழைப்புகள் போலியானவை என்றும், தங்கள் அமைப்பு நேரடியாக யாரையும் தொடர்பு கொள்வதில்லை என்றும், இது தொடர்பாக பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஆணையம் எச்சரித்துள்ளது.தொலைபேசி அழைப்பு மூலம் தெரிவிக்கப்படும் மோசடி சலுகைகள் குறித்து எச்சரிக்கை தேவை என்றும், தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்களை, அங்கீகரிக்கப்பட்ட அலுவலகம் அல்லது கால் சென்டர்களில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இத்தகைய மோசடி அழைப்புகளால் ஏமாறாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள
ஆணையம், இத்தகைய அழைப்புகள் வந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|