பதிவு செய்த நாள்
17 செப்2019
06:35
புதுடில்லி : இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் வழங்குவதில், எந்த தட்டுப்பாடும் வராது என்று, சவுதி அரேபியா தெரிவித்துள்ளதாக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சவுதி அரேபியாவின், மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, ‘அராம்கோ’ நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, எண்ணெய் விலை, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.இந்நிலையில், உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய் வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது என, சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா, உலகில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில், இரண்டாவது இடத்தில் உள்ளது.
விமான தாக்குதலை அடுத்து, சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி சரிந்தது. நாளொன்றுக்கு, 57 லட்சம் பேரல் அளவுக்கு உற்பத்தி குறைந்துவிட்டது. இது, உலக அளவிலான சப்ளையில், 5 சதவீதமாகும்.நேற்று பங்குச் சந்தைகளில், நாட்டின் பெட்ரோலிய நிறுவன பங்குகளின் விலை, 7 சதவீதம் வரை சரிவை கண்டன. இந்நிலையில், எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் தலைவர், எம்.கே. சுரானா, ‘‘கச்சா எண்ணெய் விலை, 10 சதவீதம் அதிகரித்ததால், எரிபொருள் விற்பனை நிலையங்களில், விற்பனை விலை அதிகரிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|